முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவை தொடர்ந்து டெல்லியிலும் கொரோனா தடுப்பூசி போட மக்கள் செல்ல வேண்டாம் என அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கர்நாடகாவை தொடர்ந்து டெல்லியிலும் நாளை(இன்று) கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் செல்ல வேண்டாம் என அரசு அறிவித்து உள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  இதன்படி, கடந்த ஜனவரி 16-ம்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 

இதன் பின்னர் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில், மே 1-ம் தேதியில் (இன்று) இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.  இந்தியாவிலேயே உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.  இதற்காக பல்வேறு மாநிலங்களும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தயாராகி வருகின்றன.  

இந்த சூழலில், கொரோனா தடுப்பூசி வராத நிலையில் 18-44 வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் நாளை(இன்று) மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என கர்நாடக சுகாதார அமைச்சர் கேட்டு கொண்டுள்ளார். கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும் போது, 

மராட்டியத்தின் புனே நகரில் அமைந்துள்ள சீரம் இந்தியா நிறுவனத்திடம் ஒரு கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும்படி ஆர்டர் கொடுத்திருந்தோம்.  ஆனால், கொரோனா தடுப்பூசிகளை தருவதற்கு அவர்கள் இன்னும் தயாராகவில்லை. 

எனவே, நாளை(இன்று) தடுப்பூசி போடப்படும் என நினைத்து கொண்டு, குறிப்பிடும்படியாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட நபர்கள் யாரும் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.  சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து டோஸ்கள் கிடைத்த விவரம் உறுதி செய்யப்பட்ட பின்னர் அதுபற்றி மக்களிடம் நிச்சயம் தெரிவிக்கப்படும் என்று கூறினார். 

இந்த நிலையில் கர்நாடகாவை தொடர்ந்து டெல்லியிலும் நாளை(இன்று) கொரோனா தடுப்பூசிகள் போடப்படாது என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.  இதுபற்றி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறும் போது, 

ரோனா தடுப்பூசிகள் இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை. நாங்கள் தொடர்ந்து அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து வருகிறோம்.  நாளை(இன்று) அல்லது நாளை மறுநாள்(நாளை)  தடுப்பூசிகள் வந்து விடும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.  அதற்கான உறுதிமொழியை அவர்கள் எங்களுக்கு அளித்து உள்ளனர். 

முதலில் 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இன்று அல்லது நாளை வரவுள்ளன.  அதனால் பொதுமக்கள் யாரும் நாளை(இன்று) தடுப்பூசி மையங்களுக்கு செல்ல வேண்டாம் என நான் கேட்டு கொள்கிறேன்.  

கொரோனா தடுப்பூசிகள் வந்தவுடன், அதுபற்றி நாங்கள் முறையான அறிவிப்புகளை வெளியிடுவோம்.  அதன்பின்பு முன்பதிவு செய்து கொண்டவர்கள் மையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து