முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி : இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மே தினத்தையொட்டி நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்றும், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நிதியுதவி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவி்த்துள்ளனர். 

இது குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம்  அம்மாவால் தொடங்கி வைக்கப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்படும் நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1,00,000/- ரூபாய் வீதம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்.

தவிர்க்க முடியாத பல்வேறு காரணங்களால் 2020-ம் ஆண்டு வழங்க வேண்டிய, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கான நிதியுதவியும்,  இந்த ஆண்டு வழங்க வேண்டிய நலிந்த தொழிலாளர்களுக்கான நிதியுதவியும், தற்போது தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நிதியுதவி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து