முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 5 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் நத்திபோரா பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய இந்த சண்டை ஏறக்குறைய 6 மணி நேரமாக நீடித்தது. 

இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  அவர்களை அடையாளம் காணும் பணி நடந்தது. இதில் அவர்கள், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என தெரிய வந்தது.

அவர்களில் ஒருவர் சோபோரின் ஹத்லாங்கூ பகுதியை சேர்ந்த உள்ளூர் பயங்கரவாதியான வாசிம் அகமது லோனே என்பதும், மற்றொருவர் வெளிநாட்டு பயங்கரவாதியான ஹமாஸ் என்ற அஸ்ரார் என்ற சரியா என்பதும் தெரிய வந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து வடக்கு காஷ்மீரில் அஸ்ரார் என்ற சரியா பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து