எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மதுரை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிட வலியுறுத்தி 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சு. வெங்கடேசன் எம்.பி. அளித்தார்.
அந்த மனுவில், மதுரை மாவட்டத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். மேலூர் பகுதி தொழிற்பேட்டைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மதுரைக்கான மாஸ்டர் பிளானில் புதிய தொழிற்சாலைகளுக்கு 10 சதவிகித இடங்களை வகைப்படுத்த வேண்டும். மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழித் திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்த தனி ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும். மதுரையில் புதிய நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப பூங்காவினை உருவாக்க வேண்டும்.
மதுரையில் ஜவுளிக்கென தனியாக வாரச் சந்தையினை உருவாக்க வேண்டும். சுங்கடிச் சேலைகளுக்கான சிறப்பு சந்தையினை ஏற்படுத்த வேண்டும். உயிரியல் துறையில் சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க காமராசர் பல்கலைக் கழகத்தில் டைசல் பூங்காவினை உருவாக்க வேண்டும். மதுரையின் மையத்தின் இருக்கும் மத்திய சிறைச்சாலையினை உடனடியாக புறநகர் பகுதிக்கு மாற்றிட வேண்டும். சிந்து முதல் வைகை வரை செழித்தோங்கிய தமிழர் நாகரிகத்திற்கான உலகத் தரத்திலான அருங்காட்சியகத்தினை தற்போது மதுரை மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் அமைத்திட வேண்டும். அதற்கு உலக அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்.
பாத்திமா கல்லூரி முதல் கன்னியாகுமரி நெடுஞ்சாலை சந்திப்பு வரை வைகையின் வடக்கு நதிக்கரை சாலையை விரிவுபடுத்த வேண்டும். காளவாசலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் மேலக்கால் சாலையை விரிவுபடுத்த வேண்டும். விரகனூர் சந்திப்பு , மண்டேலாநகர் சந்திப்பு, மேலமடை, அரசு ராஜாஜி மருத்துவமனை, மாட்டுத்தாவணி , தெற்குவாசல், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்களை அமைக்க வேண்டும். பழுதான நிலையில் உள்ள மேயர் முத்து பாலத்தை சீரமைக்க வேண்டும். பழங்காநத்தம் வஉசி பாலத்தினை விரிவுபடுத்தி புதுப்பிக்க வேண்டும்.
மதுரை மாவட்ட விரைவு போக்குவரத்து ஏற்பாட்டிற்கு மதுரை மெட்ரோவிற்கான சாத்தியக்கூறு விரைந்து செய்யப்பட வேண்டும். வைகை நதியினை பாதுகாக்க ஐந்து மாவட்ட நிர்வாக தலையீடுகளை மாற்றி ஒற்றை நிர்வாக அலகின் கீழ் கொண்டு வருகிற புதிய வைகை நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். வைகை உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பது கழிவுநீர் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
மதுரை மாநகரின் சாலைகளை சீரமைக்க உடனடியாக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும். அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அதிநவீன கலை அரங்கம் உருவாக்கப்பட வேண்டும். உலகத் தமிழ் சங்கத்தினை சீரமைத்து அனைத்து தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் பயன்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மதுரையில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை உருவாக்க வேண்டும். கொட்டாம்பட்டியில் புதிய அரசு ஐ.டி.ஐ உருவாக்க வேண்டும். மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் காமராசர் பல்கலைக்கழக கல்லூரியினை அரசுக் கல்லூரியாக மாற்றிட வேண்டும். மதுரை விமான நிலைய விரிவாக்க சுரங்கப்பாதை, மதுரை நகரத்தின் புதிய உள்வட்டச்சாலை , வெளிவட்டச்சாலை உள்ளிட்ட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையை இயக்கிடவும், அதற்கான பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கிடவும் வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக சாத்தையாறு அணையில் பெரியார் பிரதான கால்வாய் மூலம் நீரை தேக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வினை துவக்க வேண்டும். மேலூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடம் கட்ட 50 கோடி ரூபாய் ஒதுக்கிட வேண்டும். மதுரையின் பசுமைப் போர்வையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து , ஏற்கெனவே உள்ள காடுகளை பாதுகாக்க சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்; மாவட்டத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் அதன் முழுக் கொள்ளளவிற்கு தூர்வாரிட வேண்டும்.
வைகையின் பிறப்பிடமான மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதுரையின் சுற்றுச்சூழலை மீட்டுருவாக்கம் செய்து காற்று மாசுபடுதலை குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மதுரை எய்ம்ஸ், மதுரை நைபர், மதுரை சர்வதேச விமான நிலைய கோரிக்கைகளில் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்