முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தலை முன்னிட்டு பஞ்சாப்பில் 3 பிரமாண்ட கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய ஏற்பாடு

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

பஞ்சாப் மாநிலத்தில் வருகிற திங்கட்கிழமை முதல் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஆனால் சமீபத்தில் அந்த கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விலக்கிக் கொண் டது. இதையடுத்து உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் தேர்தல் பிரசார நடைமுறைகளில் மாற்றங்கள் வந்துள்ளன. அரசியல் கட்சிகள் வழக்கம் போல பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியும் தீவிர தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது.

குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் வருகிற திங்கட்கிழமை முதல் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 14, 16, 17-ந்தேதிகளில் 3 பிரமாண்ட பொதுக் கூட்டங்களுக்கு பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த 3 பிரமாண்ட கூட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். 14-ம் தேதி அவர் ஜலந்தரில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். 16-ந்தேதி பதன்கோர்ட் நகரிலும், 17-ந்தேதி அபோகர் நகரிலும் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். இதனால் பஞ்சாப் மாநில தேர்தல் பிரசார களம் சூடு பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து