முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் கோவில் அறங்காவலர் ராஜா நாகேந்திரகுமரன் சேதுபதி மறைவு : ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Kumaran-Sethupathi 2022-05-

Source: provided

சென்னை : ராமேஸ்வரம் திருக்கோவில் அறங்காவலர் ராஜா நாகேந்திர குமரன் சேதுபதி மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

உலக தமிழ் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும், மதுரை தமிழ் சங்கத்தின் தலைவரும், இராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், இராமேஸ்வரம் திருக்கோயில்அறங்காவலருமான ராஜா நாகேந்திர குமரன் சேதுபதி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். ராஜா நாகேந்திர குமரன் சேதுபதி, இராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகசெனட் உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறுபொறுப்புகளை வகித்த பெருந்தகையாளர். போற்றுதலுக்குரிய அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் மீது பேரன்பு கொண்டிருந்தோர்களுக்கும் எங்களது ஆழ்ந்தஇரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அதில் ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ். தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து