முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்திட வேண்டுமென்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 

மாநிலங்களுக்கிடையேயும் மற்றும் ஒன்றிய - மாநிலங்களுக்கிடையேயும் எழும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அவற்றிற்கிடையே ஒத்துழைப்பையும், கூட்டாட்சி உறவுகளையும் வலுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கவுன்சிலின் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்திட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து