முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்

புதன்கிழமை, 20 ஜூலை 2022      உலகம்
Russia-Missile 2022-07-20

Source: provided

கீவ் : உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நடைப்பெற்று வருகிற சூழலில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பல அடுக்குமாடி கட்டிடங்கள், அலுவலகங்கள் ஆகியவை குறிவைத்து தாக்கப்பட்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.  மேலும், நேற்று முன்தினம் முதல் ரஷ்யப் படைகள் டோரிட்ஸ் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் அந்த நகரில் இருந்த இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. கட்டிடத்தில் இருந்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில், டொனட்ஸ்க் பகுதியில் உள்ள மைய நகரமான கிராமடோர்ஸ்க்கில் ரஷ்யப் படை ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கட்டடங்கள் மற்றும் பொது வழிகளில் இத்தாக்குதல் நடைபெற்று வருவதால் உயிர் சேதங்கள் அதிகரிக்கும் என உக்ரைன் அரசு கவலை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து