முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க விபத்தில் 3 பேர் பலி - பலர் மாயம்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      இந்தியா
Jharkhand- 2023 06 09

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தின், பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் பவ்ரா கோலியரி பகுதியில் உள்ள பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சுரங்க விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் மாயமனதாகவும் துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

உள்ளூர் மக்களின் உதவியுடன் 3 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நிலக்கரி சுரங்க விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக பவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து