முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயற்குழு கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? அத்வானி விளக்கம்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜெய்ப்பூர், ஜூன். 11  - பாஜக தேசிய செயற்குழு கூட்டத்துக்கு  ஏன் போகவில்லை என்று  மூத்த தலைவர் எல்.கே. அத்வானி  விளக்கம் கூறியிருக்கிறார்.கட்சியில்  நரேந்திர மோடிக்கு  முக்கிய பொறுப்பு   தருவதில்   அவருக்கு  ஆட்சேபம்  உள்ளது  என்றும்  தனது அதிருப்தியை 

தெரிவிக்கும் விதமாக  அவர் கட்சிக் கூட்டத்துக்கு போகவில்லை என்றும்  பரவலாக பேச்சு  எழுந்தது. இந்நிலையில்,  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நடைபெற்ற  ஆன்மீக  நிகழ்ச்சியில்  அவர் ஆற்றிய  உரை ஒளிபரப்பப்பட்டது. இந்த உரையின்  போது  தனது  உடல் நலக் குறைவு  பற்றி தெரிவித்தார்.  ஹிந்தியில்  அவர் ஆற்றிய  11 நிமிஷ  உரை டெல்லியில்  பதிவு செய்து  ஜெய்ப்பூருக்கு   அனுப்பப்பட்டிருந்தது. அதில் தனது உடல்  நிலை குறித்து  அத்வானி தெரிவித்திருப்பதாவது,   ஜெய்ப்பூரில்  இருக்கும்  சாத்வி  பிரீதி  பிரியம் வதாவுடன் தொலைபேசியில்  பேசினேன்.  அவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு    நேரில் வர முடியாததற்கு   நான் மன்னிப்பு  கேட்டேன்.  கடந்த மூன்று நாட்களாக  எனக்கு  கடுமையான  வயிற்றுக் கோளாறு  காரணமாக  உடல் நிலை சரியாக இல்லை.  இதனால்   எங்கள்  கட்சியின் மிக முக்கியமான  தேசிய செயற்குழு  கூட்டத்தில்  கலந்து கொள்ள  முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

உடல் நிலை பற்றி கூறும் போது  கட்சிக் கூட்டம்  பற்றி குறிப்பிட்டதை தவிர,  ஆன்மீக நிகழ்ச்சியில்  ஒளிபரப்பு   செய்வதற்காக  அத்வானி ஆற்றிய  உரையில்  கொஞ்சம்  கூட அரசியல்  கலக்காமல்  பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்