முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர் - வரும் 13ல் இந்திய அணி தேர்வு

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை,மே.6 - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடவுள்ள இந்திய அணியின் தேர்வு வரும் 13 ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி தலைமையிலான தேர்வுக்குழுவினர் இந்திய அணியை தேர்வு செய்யவுள்ளனர். டெஸ்ட் போட்டிக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும். ஐ.பி.எல். தொடர் வரும் 28 ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் 1 ம் தேதி இந்திய அணி மேற்கந்திய தீவுகளுக்கு புறப்பட்டு செல்கிறது. அங்கு ஒரு இருபது ஓவர் ஆட்டத்திலும், 5 ஒரு நாள் ஆட்டங்களிலும் விளையாடுகிறது. 

இருபது ஓவர் ஆட்டம் ஜூன் 4 ம் தேதி நடைபெறுகிறது. அதன் பிறகு ஜூன் 6 முதல் 16 வரை ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன் பிறகு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

உலகக் கோப்பை அதைத் தொடர்ந்து ஐ.பி.எல் ஆகியவற்றில் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் தங்களுக்கு ஓய்வு தேவை என்று இந்திய அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட மூத்த வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர். அதே சமயம் மூத்த வீரர்கள் இடம் பெறாத பட்சத்தில் ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைந்து விடும். மேலும் விளம்பர வருமானம் குறைந்து விடும் என்பதால் இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் மிகவும் கவனத்துடன் செயல்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்