எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட்டை அகற்றிட வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது கப்பலூர் டோல்கேட் மற்றும் முக்கிய சாலைகளில் குறுக்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் 9 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கி திருமங்கலம் நகரம் ஸ்தம்பித்தது.
திருமங்கலம் நகரின் எல்லைக்கு மிகவும் அருகிலுள்ள கப்பலூர் நான்கு வழிச்சாலையில் உபயோகிப்பாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் டோல்கேட் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது. இங்கு நான்கு வழிச்சாலையை பயன்படுத்திடாமல் சர்வீஸ் சாலையின் வழியாக சென்றிடும் திருமங்கலம் பகுதி உள்ளுர் வாகனங்களிடம் அவ்வப்போது டோல் கட்டணம் கேட்பதும், அதற்கு திருமங்கலம் பகுதியிலுள்ள வாடகை மற்றும் சொந்த வாகனங்களின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதும் வாடிக்கையான ஒன்றாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே சர்வீஸ் சாலையை மட்டுமே பயன்படுத்தி செல்லும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த உள்ளுர் வாகனங்கள் உரிய ஆவணங்களை காட்டி கட்டண விலக்கு பெற்று பயணம் மேற்கொண்டு வந்தன.
சர்வீஸ் சாலையை பயன்படுத்தி சென்றிடும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த உள்ளுர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு சலுகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு மாறாக தற்போது கட்டண விலக்கு ரத்து செய்யப்பட்டு நேற்று முதல் 50சதவீத சுங்க கட்டணம் செலுத்திச் சென்றிட வேண்டும் என கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் அறிவித்தது.
இந்த அறிவிப்பு திருமங்கலம் தொகுதி உள்ளுர் வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து திருமங்கலம் நகரில் அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து சங்கங்கள்,வாடகை மற்றும் சொந்த உபயோக வாகனங்களின் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் இணைந்து தேசிய நெடுஞ்சாலை விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்றிட வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று கப்பலூர் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் டோல்கேட்டின் குறுக்கே தரையில் அமர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்சி நிர்வாகிகள் மற்றும் போராட்டக்குழுவினருடன் இணைந்து டோல்கேட்டை அகற்றிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே கப்பலூர் டோல்கேட் மற்றும் திருமங்கலம் நகரைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் குறுக்கே ஏராளமான வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிறுத்தினர். இதனால் திருமங்கலம் நகரின் வழியாக சென்றிடும் தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் 5கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் போராட்டக்குழுவினர் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றினர். அப்போது அதிகளவில் திரண்ட போராட்ட குழுவினர் போலீஸ் வாகனங்கள் முன்பாக மறியலில் ஈடுபட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரை போலீஸ் வேன்களிலிருந்து கீழே இறக்கினர்.
இதனை தொடர்ந்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் ஆர்.டி.ஓ. சாந்தி,தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அலுவலர் பரத்வாஜ், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், டி.ஸ்.பி.அருள், ஏ.டி.எஸ்.பி. கருப்பையா, சிட்கோ தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாதராஜா மற்றும் போராட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் முடிவு எட்டப்படாத நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கப்பலூர் டோல்கேட்டில் முற்றுகை போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் காலை 9 மணிக்கு துவங்கிய முற்றுகை போராட்டம் மாலை 6 மணியை தாண்டி 9 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
இதனால் தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.இருப்பினும் மாவட்ட கலெக்டர் தொலைபேசியில் அளித்த உத்தரவாதத்தின் பேரில் வரும் 15-ம் தேதி திங்கள் கிழமை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் அதுவரையில் திருமங்கலம் பகுதி உள்ளுர் வாகனங்கள் வழக்கம் போல் கட்டண விலக்கு பெற்று இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 9மணி நேர முற்றுகை போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
எனினும் வரும் திங்கள் கிழமை பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் மீண்டும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 9மணி நேரமாக நீடித்து வந்த பரபரப்பான முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்து நடுவழியில் நின்றிருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கிளம்பிச் சென்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 1 day ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்1 week 4 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 1 day ago |
-
சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை
08 Sep 2024தென்காசி : சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆதி திராவிட மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
08 Sep 2024சென்னை : ஆதி திராவிட மாணவர்களின் விடுதிகளில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
உலக இயன்முறை மருத்துவ தினம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
08 Sep 2024சென்னை : உலக இயன்முறை மருத்துவ தினத்தையொட்டி அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாலியல் புகாருக்கு உள்ளான நபர் 5 ஆண்டுகள் நடிக்க தடை : தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
08 Sep 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க 68-வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது.&n
-
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு : 3 பேரை தேடும் பணி தீவிரம்
08 Sep 2024தஞ்சாவூர் : கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.
-
மூடநம்பிக்கை செயல்கள் பள்ளிகளில் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல்
08 Sep 2024புதுக்கோட்டை : பள்ளிகளில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
-
அறநிலையத் துறைக்கு திராவிட மாடல் ஆட்சிதான் பொற்காலம் : அமைச்சர் பி.கே.சேகர் பாபு பெருமிதம்
08 Sep 2024நெல்லை : திராவிட மாடல் ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் பொற்கால ஆட்சியாக கருதப்படும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2024
08 Sep 2024 -
GOAT - திரை விமர்சனம்
08 Sep 2024இளையதளபதி விஜய், இயக்குர் வெங்கட் பிரபு ஏஜிஎஸ் கூட்டணியில் விஜய் மற்றும் விஜயகாந்த் கேமியோ என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி சமீபத்தில் வெளியுள்ள படம் தி கிரேட்டஸ்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2024
08 Sep 2024 -
இஸ்ரேலிய பயங்கரவாதம்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டணிக்கு துருக்கி அதிபர் எர்டோகன் அழைப்பு
08 Sep 2024அங்காரா : இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டணி அமைக்க இஸ்லாமிய நாடுகளுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
-
லக்னோ கட்டிட விபத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு : பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
08 Sep 2024லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா, சீனாவால் உதவ முடியும் : இத்தாலி பிரதமர் மெலோனி கருத்து
08 Sep 2024ரோம் : உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும் என்று இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.
-
தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் : நடிகர் விஜய் அறிவிப்பு
08 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் : வில்லன் நடிகர் விநாயகன் கைது
08 Sep 2024திருவனந்தபுரம் : ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பாக பிரபல வில்லன் நடிகர் விநாயகனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகி
-
மத்திய வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது : தமிழகத்தில் 14-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
08 Sep 2024சென்னை : மத்திய வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பீகாரில் இணைப்பு உடைந்ததால் 2-ஆக பிரிந்த மகத் எக்ஸ்பிரஸ் ரயில்
08 Sep 2024பாட்னா : டெல்லியில் இருந்து இஸ்லாம்பூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்த மகத் விரைவு ரயிலின் இணைப்பு உடைந்ததால் ரயில் இரண்டாக பிரிந்ததாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.&
-
மம்தாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் எம்.பி. ஜவ்கர் சிர்கார்
08 Sep 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை அரசு கையாண்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணாமுல் காங்க
-
ஐநா பொதுச் சபையில் பிரதமர் மோடியின் உரை கிடையாது : உத்தேச பட்டியல் வெளியீடு
08 Sep 2024வாஷிங்டன் : ஐ.நா. சபை வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட பேச்சாளர் பட்டியலில் பிரதமர் மோடியின் பெயர் இடம் பெறவில்லை.
-
ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி? - இன்று நடக்கும் கூட்டத்தில் முடிவு
08 Sep 2024புதுடெல்லி : ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.
-
டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு : நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
08 Sep 2024சென்னை : படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2024
08 Sep 2024 -
வியட்நாமில் கரையை கடந்தது யாகி புயல்: 14 பேர் உயிரிழப்பு
08 Sep 2024ஹனோய் : வியட்நாமில் யாகி சூறாவளி புயல் கரையை கடந்தது. புயல், மழை தொடர்பான விபத்துகளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மத்திய நிதித்துறை செயலராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
08 Sep 2024புதுடெல்லி : மத்திய அரசின் நிதித்துறை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்
-
அசாமில் புதிய ஆதார் கார்டு பெற கட்டுப்பாடு விதிப்பு : முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தகவல்
08 Sep 2024கவுகாத்தி : அசாம் மாநிலத்தில் புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் தேசிய குடிமக்கள் பதிவேடு விண்ணப்ப ரசீது எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில முத