எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : ரூ.5 கோடி கேட்டு மும்பை போக்குவரத்து காவல் துறைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது.
கடந்த 12-ம் தேதி இரவு, மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கான பாதுகாப்பை மகராஷ்டிர அரசு மீண்டும் பலப்படுத்தி உள்ளது. அவரை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த சுமார் 70 பேர், 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக மகராஷ்டிரா காவல் துறை கருதுகிறது. இந்நிலையில், சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மும்பை போக்குவரத்து காவல் துறைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் உடன் பேச சல்மான் கானின் முன்னாள் காதலி சோமி அலி முயற்சித்து வருகிறார். அதனால் சமூக வலைதள பதிவு மூலம் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அவர் தூது விட்டுள்ளார்.
“சகோதரர் லாரன்ஸுக்கு வணக்கம். நீங்கள் சிறையில் இருந்தாலும் வீடியோ அழைப்பு மூலம் வெளியில் உள்ளவர்களிடம் பேசுவீர்கள் என்பதை அறிவேன். அதனால் நான் உங்களுடன் சிலவற்றை பேச வேண்டும். உங்களை எப்படி தொடர்பு கொண்டு பேசுவது. உலகில் ராஜஸ்தான் என்னுடைய பேவரைட் இடம். இருப்பினும் முதலில் உங்களுடன் வீடியோ காலில் பேச விரும்புகிறேன். இதை உங்களது நலனுக்காக சொல்கிறேன். என்னை நீங்கள் நம்பலாம். உங்களது மொபைல் எண்ணை எனக்கு கொடுக்கவும். நன்றி” என தனது இன்ஸ்டா பதிவின்மூலம் சோமி அலி தெரிவித்துள்ளார்.
“ஒருவரை கொல்வது அல்லது துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்துவது என்பது எல்லை மீறிய வெறிச்செயல். நான் வேட்டையாடுவதை ஆதரிக்கவில்லை. ஆனால், அது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அந்த சம்பவம் நடந்தபோது சல்மான் கான் இள வயதுக்காரர். அதனால் பிஷ்னோய் இன தலைவருக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அவரை மன்னித்து விடுங்கள். அவர் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன். யாருடைய உயிரை பறிப்பதும் குற்றம் ஆகும். அது சல்மான் கானோ அல்லது சாமானிய மனிதனாக இருந்தாலும் சரி. உங்களுக்கு நீதி வேண்டுமென்றால் நீதிமன்றத்தை நாடலாம். அவரை கொள்வதால் உயிரிழந்த மானை கொண்டு வர முடியாது” என கடந்த மே மாதம் சோமி அலி தெரிவித்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2024.
18 Oct 2024 -
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் வரும் 21-ம் தேதி 31 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் நடத்தி வைக்கிறார் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Oct 2024சென்னை : வரும் 21-ம் தேதி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் மு.க.
-
கவரப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல : ரயில் விபத்து குறித்த விசாரணையில் தகவல்
18 Oct 2024திருவள்ளூர் : கவரைப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
-
தாய் - தந்தையரின் கால்களில் மட்டும்தான் விழ வேண்டும் : த.வெ.க. தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் வேண்டுகோள்
18 Oct 2024சேலம் : நீங்கள் அனைவரும் தாய் - தந்தை கால்களில் மட்டும்தான் விழ வேண்டும். வேறு யாருடைய காலிலும், நீங்கள் விழக்கூடாது.
-
தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரை: ஐ.ஆர்.சி.டி.சி.
18 Oct 2024சென்னை : தீபாவளியொட்டி, புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில், கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரையை ரயில்வே சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.
-
நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் ரயில்: தீபாவளி பண்டிகைக்கு அறிமுகம்
18 Oct 2024புதுடெல்லி : தீபாவளி மற்றும் சாத் பண்டிகையை முன்னிட்டு நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கப்பட உள்ளது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Oct 2024சென்னை : தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ராஜீவ் காந்தியை அவதூறாக பேசிய வழக்கு: விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் ஆஜர்
18 Oct 2024விழுப்புரம் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் நேற்று ஆஜரானார்.
-
புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்தது கலால்துறை
18 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தொலைதூர கல்வி படிப்பில் சேர 31-ம் தேதி வரை அவகாசம் : இக்னோ பல்கலைக் கழகம் அறிவிப்பு
18 Oct 2024சென்னை : தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
-
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி
18 Oct 2024புதுடெல்லி : வரும் 22, 23-ம் தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா செல்ல உள்ளார்.
-
மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிடுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
18 Oct 2024சென்னை : தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தி.மு.க. அரசு தலையிடுவதாக அ.தி.மு.க.
-
லெபனானில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு : ஹிஸ்புல்லா தகவல்
18 Oct 2024பெய்ரூட் : லெபனானில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு
18 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்தாய் வாழ்த்து விவகாரம்: தமிழக கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும் : முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Oct 2024சென்னை : தமிழ்நாட்டையும் மக்களின் உணர்வையும் வேண்டும் என்றே அவமதிக்கும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும் டிடி தமிழ் நிகழ்ச்சியில் தி
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு : அருவிகளில் குளிக்க 6-வது நாளாக தடை
18 Oct 2024ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய குழு: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி
18 Oct 2024புதுடெல்லி : ஓ.டி.டி.
-
குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Oct 2024புதுடெல்லி : நாடு முழுவதும் குழந்தை திருமணங்களைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் : இந்தோனேஷிய அரசு தொடங்கியது
18 Oct 2024ஜகார்தா : உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதனை குறைக்கும் வகையில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடங்கியுள்ளத
-
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது : நவம்பர் 13-ல் முதல் கட்ட வாக்குப்பதிவு
18 Oct 2024ராஞ்சி : ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது.
-
பச்சை நிற பாக்கெட் பால் உற்பத்தி நிறுத்தமா?: ஆவின் நிர்வாகம் விளக்கம்
18 Oct 2024சென்னை : பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
-
12,000 ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு வடகொரிய அரசு அனுப்பியுள்ளது : தென்கொரிய உளவு அமைப்பு தகவல்
18 Oct 2024பியாங்யாங் : ரஷ்யாவுக்கு 12 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா உளவு அமைப்பு தெரிவித்துள்ளது
-
ஹமாஸ் தலைவர் படுகொலை: காசா போர் முடிவுக்கான துவக்கம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கருத்து
18 Oct 2024ஜெருசலேம் : காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, போர் முடிவதற்கான துவக்கப்புள்ளி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
-
இந்தி திணிப்பை ஏற்க முடியாது: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
18 Oct 2024சென்னை : இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை மத்திய அரசு திணிப்பதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஈஷா யோகா மையம் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு
18 Oct 2024புதுடெல்லி, ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.