முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர பிரதேச சட்டசபையில் பெரும் அமளி

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், பிப்.23 - ஆந்திர பிரதேச சட்டசபையில் தெலுங்கு தேசம் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய  சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பெரும் அமளியில் ஈடுபட்டதால் சபை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய  சமிதி  வலியுறுத்தி வருகிறது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவு அளித்து வருகிறது. 

ஆந்திர சட்டசபையில் 5 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க்களின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யக்கோரியும்,  தனி தெலுங்கானா மாநில கோரிக்கை தொடர்பாக சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி நேற்று ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பதாகைகளை ஏந்தியபடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இவர்கள் சபையின் மையப்பகுதியில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டபடி இந்த கோரிக்கையை எழுப்பி கோஷம் போட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக தெலுங்கானா பகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் கோஷம் போட்டனர். இதனால் அமளி மேலும் அதிகரித்தது.

தாங்கள் கொண்டு வந்துள்ள ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கும்படி அவர்கள் கோஷங்களை போட்டனர். ஆனால் துணை சபாநாயகர் நடேந்தலா மனோகர் அதற்கு அனுமதி மறுத்தார். ஆனால் அமளி நீடிக்கவே சபை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு சபை  மீண்டும் கூடிய போதும் இதே நிலை நீடித்ததால் சபை மீண்டும் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்