எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உத்தரமேரூர், மே.10 - மதுராந்தகம் அருகே, சென்னையைச் சேர்ந்த பெண் கத்தியால் சரமாரி குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் ``மண்டபம்'' படத்தில் நடித்த நடிகர் தமிழரசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பலி கூறப்படுவதாவது:-
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். சினிமா துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு சினிமா உலகில் நுழைந்தார். மண்டபம் உள்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
திருவல்லிக்கேணி ஆனந்த விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி கவிதா (45). ஒரு வழக்கு தொடர்பாக கவிதா நடிகர் தமிழரசனை சந்தித்தார்.
இதையடுத்து கவிதாவுக்கு ஆதரவாக தமிழரசன் செயல்பட்டார். இந்த நிலையில் நேற்று வழக்கு விஷயமாக சிலரை சந்திப்பதற்காக நடிகர் தமிழரசன், கவிதா, இவர்களது தோழியான துணை நடிகை அலமேலு ஆகிய 3 பேரும் ஒரு காரில் மதுராந்தகம் சென்றனர். இந்த நிலையில் பழைய சீவரம் அருகே ஆற்றங்கரையில் கவிதா கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆற்றில் மணல் எடுக்க வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், கருணாநிதி இருவரும் கவிதாவிடம் சென்று பேச்சுக்கொடுத்தனர். அப்போது கவிதா, சென்னையைச் சேர்ந்த தமிழரசன் என்பவர்தான் என்னை இங்கு அழைத்து வந்து கத்தியால் குத்தினார் என்று கூறினார். உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து கவிதாவை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கவிதாவின் உயிர் பிரிந்தது.
இதற்கிடையே நடிகர் தமிழரசன், செங்கல்பட்டு பெண் டி.எஸ்.பி. பொன்னியை சந்தித்து பதட்டத்துடன் புகார் ஒன்றை தெரிவித்தார். நானும் கவிதா என்ற பெண்ணும் சென்னையில் இருந்து இங்கு வந்திருந்தோம். பழைய சீவரம் பெருமாள் கோவில் அருகே நான் காரை நிறுத்தி இருந்தேன். கவிதா சிறுநீர் கழிப்பதற்காக அங்கிருந்த தரைப்பாலத்திற்கு அருகில் சென்றார். அப்போது காரில் வந்த கும்பல் அவரை கடத்திச்சென்று விட்டது என்று கூறினார்.
இது தொடர்பாக டி.எஸ்.பி. பொன்னி, நடிகர் தமிழரசனிடம் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே சாலவாக்கம் போலீசார் கவிதா கொலை செய்யப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கவிதா உயிரை விடுவதற்கு முன்னர் தமிழரசன் தான் தன்னை கத்தியால் குத்தினார் என்று கூறிய விவரத்தை போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் தமிழரசனை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் பிடியில் இருந்து தப்புவதற்காக தமிழரசன் கடத்தல் நாடகம் ஆடியது தெரிவந்தது. அவர் எதற்காக கவிதாவை கொலை செய்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தமிழரசன் கைது செய்யப்பட்ட சம்பவம் சினிமா வட்டாரத்திலும், வக்கீல்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழரசனுடன் சென்ற துணை நடிகை அலமேலுவும் போலீசில் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திடீரென அவர் வயிறு வலிப்பதாக கூறினார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரிடமிருந்து கவிதா கொலை தொடர்பாக எந்தவித தகவல்களையும் போலீசாரால் திரட்டமுடியவில்லை.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, விசாரணைக்கு பயந்து துணை நடிகை அலமேலு, கண்ணை மூடிக் கொண்டு மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பின்னர் கவிதா கொலை குறித்து அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.