எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் டோகோவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சசிகுமார் மற்றும் ராம்குமார் வெற்றி பெற்றனர். டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா- டோகோ இடையிலான 2 நாள் ஆட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளான நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், டோகோவின் லியோவா அயிட் அஜாவோன் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சசிகுமார் 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அணிக்கு முதல் புள்ளியை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் மற்றொரு இந்திய வீரரான ராம்குமார் ராமநாதன், டோகோவின் தாமஸ் செடோட்ஜி உடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய ராம்குமார் 6-0 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு 2-வது புள்ளியை பெற்றுக்கொடுத்தார். முதல் நாள் முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று 2-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
______________________________________________________________________________________________
பாக். வீரர்களுக்கு அறிவுரை
எதிர்வரும் சாம்பியஸ் டிரோபி போட்டி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் பெரும்பாலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இம்முறையும் இந்திய அணியே வெற்றி பெறும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக சமீப கால தோல்விகளுக்கு அவர்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஆற்றும் நட்பே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் மொயீன் கான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதுவே கடைசியில் பாகிஸ்தான் அணிக்கு பலவீனமாக அமைந்து தோல்வியை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே நீங்கள் வெற்றி பெற இந்திய அணியினருடன் நட்பை ஆற்றாமல் விளையாடுங்கள் என்று அவர் பாகிஸ்தானுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.
______________________________________________________________________________________________
காலிறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சீனாவின் செங் ஸிங் வாங்கிடம் தோல்வி அடைந்தார். தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் , சீனாவின் செங் ஸிங் வாங்கிடம் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 17-21, 16-21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-19, 18-21, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷூயான் சென் சூவிடம் தோல்வி அடைந்தார்.
______________________________________________________________________________________________
இந்திய அணி மீது அதிருப்தி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி புனே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், துபேவுக்கு மாற்று வீரராக ராணா களமிறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இணையான மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை. ஒன்று துபே 25 மைல் வேகத்தில் பந்து வீசுபவராக இருக்க வேண்டும் அல்லது ராணா சிறப்பான பேட்டராக இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் இணையான மாற்று வீரராக கருத முடியும்.
இதுகுறித்து என்னிடம் எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் பேட்டிங் பிடிக்க வந்தபோது யாருக்கு பதிலாக ராணா என்ற குழப்பம் நீடித்தது. பிறகுதான் துபேவுக்கு பதிலாக களமிறக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர். நான் நடுவரிடம் முறையிட்டபோது, போட்டி நடுவர் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்துவிட்டனர். அதன்பிறகு பேசுவதற்கான வாய்ப்பில்லாமல் போனது. இது ஆட்டத்தில் ஒரு பகுதி என்றாலும், போட்டி நடுவரிடம் முறையிட்டு முறையான விளக்கத்தை பெறுவோம் எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-02-2025.
01 Feb 2025 -
ஒரேநாளில் 2-வது முறை அதிகரித்த தங்கம் விலை சவரன் ரூ.62 ஆயிரத்தை கடந்தது
01 Feb 2025புதுடெல்லி: மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையானது.
-
தமிழர்களின் நிலம் திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பு : அதிபர் திசநாயகா உறுதி
01 Feb 2025கொழும்பு : இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் திசநாயகா உறுதி அளித்துள்ளார்.
-
மணல் குவாரிகளை திறக்க அ.தி.மு.க. அனுமதிக்காது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
01 Feb 2025சென்னை : தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்கமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலெக்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து
01 Feb 2025சென்னை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள் சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
மத்திய பட்ஜெட் 2025-ல் விலை உயரும், விலை குறையும் பொருட்கள்?
01 Feb 2025புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக சில பொருள்களின் விலை குறைகின்றன.
-
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
01 Feb 2025சென்னை : தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை; ரூ.1,165 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்பிப்பு
01 Feb 2025சென்னை : தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, நான்காவது புது ரயில் பாதை 1,165 கோடி ரூபாயில் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை, ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அ
-
8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
01 Feb 2025ராய்ப்பூர், சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதனை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
-
கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு அமல் : வெள்ளை மாளிகை தகவல்
01 Feb 2025வாஷிங்டன் : கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கான 25 சதவீதம் வரி விதிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணா போல் மிமிக்ரி செய்து சீமான் ஓட்டு வேட்டை
01 Feb 2025ஈரோடு : முன்னாள் முதல்வர் அண்ணா போல் பேசி, சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது
01 Feb 2025சென்னை : வழிதவறி விட்டதாக உதவி கேட்ட 13 வயது சிறுமிக்கு பட்டினப்பாக்கம் போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸ்காரர் ராமன் கைது செ
-
ஜூனியர் மகளிர் டி-20 உலகக்கோப்பை இறுதி: இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று மோதல்
01 Feb 2025கோலாலம்பூர் : ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதுகின்றன.
-
மத்திய பட்ஜெட் தாக்கல்: எதிர்க்கட்சி வெளிநடப்பு
01 Feb 2025புதுடெல்லி : மத்திய பட்ஜெட் தாக்கலின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
8 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.வில் ஐக்கியம்
01 Feb 2025புதுடில்லி : டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 8 பேர் நேற்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர்.
-
அமெரிக்காவில் மீண்டும் விமானம் விபத்து: குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது
01 Feb 2025பிலடெல்பியா : பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மத்திய பட்ஜெட்டில் வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழகம் புறக்கணிப்பு: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
01 Feb 2025சென்னை : வழக்கம் போல் இந்த ஆண்டும் மத்திய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது என்று த.வெ
-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா நன்றி
01 Feb 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
தேர்தலை நோக்கமாக கொண்டது: மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க. கடும் விமர்சனம்
01 Feb 2025சென்னை: தேர்தல் நடைபெற உள்ள பீகார் போன்ற மாநிலங்களில் அரசியல் லாபத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட மத்திய பட்ஜெட் என்று தி.மு.க. விமர்சனம் செய்துள்ளது.
-
அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்ட மருத்துவமனைகளில் 200 புற்றுநோய் மையங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி: அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல் நேர புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும் மற்றும் புற்றுநோய், அரிய வகை நோய்கள் மற்றும் இதர நாள்பட்ட ந
-
இஸ்ரேல் பணய கைதிகளில் மேலும் 3 பேரை விடுதலை செய்தது ஹமாஸ் அமைப்பு
01 Feb 2025காசா முனை : இஸ்ரேல் பயண கைதிகள் 3 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.
-
ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி: ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
6 துறைகளில் சீர்திருத்தங்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி: 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் ஆறு துறைகளில் சீர்திருத்தங்களை தொடங்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
குடிமக்களின் பைகளை நிரப்பும் மத்திய பட்ஜெட் பிரதமர் மோடி புகழாரம்
01 Feb 2025புதுடெல்லி: குடிமக்களின் பைகளை நிரப்பவும், சேமிப்பை அதிகரிக்கச் செய்யவும், நாட்டின் வளர்ச்சிக்கு குடிமக்கள் பங்களிப்பவர்களாக மாறவும் இந்த பட்ஜெட் மிகவும் வலுவான அடித்தள
-
மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாததற்கு துணை முதல்வர் கண்டனம்
01 Feb 2025சென்னை : மத்திய நிதி நிலை அறிக்கையில் இந்த முறையும் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் இல்லாதது தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும், அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையை