முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தி.மு.க. முப்பொரும் விழா: தலைமை கழகம்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 11 - வேலூரில் 15-ந்தேதி நடைபெறுவதாக இருந்த தி.மு.க. முப்பெரும் விழா ரத்து செய்யப்பட்டு சென்னையில் 17-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

பெரியார், அண்ணா, கழகம் பிறந்த நாட்களையொட்டி தி.மு.க. முப்பெரும் விழா 15-ந்தேதி வேலூரில் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை 15-ந்தேதி வரை நீடிக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவிப்பதால் சென்னையில், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்படி முப்பெரும் விழா நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்