எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாமக்கல் : “மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என சொல்லவில்லை” என்று மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்தியா 100-வது சுதந்திர தினம் கொண்டாடும் சமயத்தில் இந்தியா வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்பதற்கு அடித்தளமாக இருக்கும் வகையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றுவதற்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
காங்கிரஸ் மத்தியில் இருந்த சமயத்தில் ரூ.800 கோடி மட்டும் ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ரூ.6,500 கோடியை ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு, தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழுக்கும், தமிழ் பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்தான் தொன்மையான மொழி என வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி செல்லும் சமயங்களில் வலியுறுத்துகிறார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டன. அதனால் டெல்லியில் மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர். தமிழகத்தில் விரைவில் டபுள் இன்ஜின் சர்க்கார் வர உள்ளது. புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் தாய் மொழியை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என சொல்லவில்லை. இந்தி பிரச்சார சபாவில் அதிகளவில் சேர்ந்து இந்தி படிக்கின்றனர். தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் 3-வது மொழியாக இந்தி உள்ளது. ஆனால், அரசுப் பள்ளியில் 3-வது மொழியாக மாணவர்கள் இந்தி படிக்க முடியாதபடி வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
அரசியல் காரணங்களுக்காக ரூ.5 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வராமல் உள்ளது. ஒவ்வொரு நிதிக்கும் ஒரு விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை ஏற்றால்தான் நிதி கிடைக்கும். எனவே, மக்களை திசை திருப்பாமல், மாணவர்களின் கல்வியில் விளையாடாமல், அரசியல் செய்யாமல் 3-வதாக, ஒரு மொழியைத்தான் கொண்டுவர சொல்கிறார்கள். இந்திய மொழிகளில் ஒன்றைத்தான் 3-வது மொழியாக கொண்டு வரச் சொல்கின்றனர். அது இந்தி மொழிதான் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. ஒரு குழந்தை எந்த மொழி, எத்தனை மொழி படிக்க வேண்டும் என்பது குழந்தையின் உரிமை. இதை எதிர்ப்பதற்கு முதல்வருக்கு என்ன அதிகாரம் உள்ளது. எனவே, இந்த பாகுபாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
முன்னதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு நடத்தினார். பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் சரவணன், ராஜேஸ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 22 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
மும்மொழிக் கொள்கையில் எங்கும் இந்தி கட்டாயம் என்று கூறப்படவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
22 Feb 2025நாமக்கல் : “மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என சொல்லவில்லை” என்று மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
ரயில் டிரைவர்கள் இளநீர் அருந்த தடை: உத்தரவை வாபஸ் பெற்றது இந்திய ரயில்வே நிர்வாகம்
22 Feb 2025திருவனந்தபுரம் : லோகோ பைலட்கள் பணியின் போது இளநீர், இருமல் டானிக் உள்ளிட்டவற்ற சாப்பிட கூடாது என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்றது.
-
வரும் 26-ம்தேதி ஈஷா மகா சிவராத்திரி விழா: அமித்ஷா, டி.கே.சிவகுமார் பங்கேற்பு
22 Feb 2025கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இம்மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.
-
ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைப்பவர்: கமல்ஹாசன் மீது த.வெ.க. கடும் விமர்சனம்
22 Feb 2025சென்னை, இனியாவது ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைக்காமல் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள் என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனை த.வெ.க.
-
பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எப்.பி.ஐ. புதிய இயக்குநராக பதவியேற்றார் காஷ் படேல்
22 Feb 2025அமெரிக்கா : அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார்.
-
தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும் வேட்டு வைக்கும் தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் ரூ.10,000 கோடி கொடுத்தாலும் கையெழுத்திடவே மாட்டேன் : கடலூர் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
22 Feb 2025கடலூர் : தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் வேட்டு வைக்கும் திட்டம்தான் தேசியக் கல்விக் கொள்கை திட்டம் என்று குற்றஞ்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.10,000 கோடி கொடுத்தாலு
-
எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் தமிழ் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம் : கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Feb 2025கடலூர், : எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் தமிழ் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் வெற்றி தொடருமா? - பாகிஸ்தானுடன் இன்று மோதல்
22 Feb 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
-
மகாசிவராத்ரியை முன்னிட்டு சென்னை, பெங்களூருவில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கம்
22 Feb 2025சென்னை : மகாசிவராத்ரியை முன்னிட்டு சென்னை, பெங்களூருவில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
-
நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகல்?
22 Feb 2025சென்னை, நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை
22 Feb 2025இஸ்லமாபாத், பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
22 Feb 2025சென்னை : விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வு: அப்பா செயலியை வெளியிட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
22 Feb 2025கடலூர் : கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதம் மட்டுமே நிறைவேற்றம்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
22 Feb 2025சென்னை, தி.மு.க.
-
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னர் பதில் மனு
22 Feb 2025சென்னை : தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தக் லைப் நாயகன் குறித்து பதிலளித்த கமல்
22 Feb 2025சென்னை : தான் நடித்துள்ள தக் லைப் படத்தின் நாயகன் கதாபாத்திரம் குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியுள்ளார்.
-
கேரளத்தில் தாமரை மலரும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
22 Feb 2025கொச்சி : கேரளத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
-
ஹமாஸ் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண் பணய கைதியின் சடலம்தான் : உறுதி செய்த குடும்பத்தினர்
22 Feb 2025இஸ்ரேல் : ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரெலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
தியாகராஜர் பாகவர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மரியாதை : இ.பி.எஸ். அறிவிப்பு
22 Feb 2025சென்னை : மறைந்த நடிகரும் பழம்பெரும் பாடகருான எம்.கே.தியாகராய பாகவதரின 116 வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்படும் என்று அ.தி.மு.க.
-
10 ஆண்டுகளாக ஒருவேளை மட்டும்தான்: தனது உணவு முறை குறித்து மனந்திறந்த முகமது ஷமி..!
22 Feb 2025துபாய் : 10 ஆண்டுகளாக தான் ஒரு வேளை மட்டுமே உணவு உண்பதாக இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
-
திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைது
22 Feb 2025சென்னை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் கைது செய்து 3 நாள் காவலில் எடுத்து பள்ளி
-
மெக்சிகோ கடல் பகுதியில் கரை ஒதுங்கிய ‘டூம்ஸ் டே’ மீன்கள்: பேரழிவுக்கான அறிகுறி என அச்சம்
22 Feb 2025மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ கடல் பகுதியில் ‘டூம்ஸ் டே’ (இறுதி நாள்) மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ மீன்கள் கரை ஒதுங்கியுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்
-
விமானத்தில் உடைந்த இருக்கை: மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டது ஏர் இந்தியா நிறுவனம்
22 Feb 2025புதுடெல்லி, போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு உடைந்த இருக்கை வழங்கப்பட்ட நிலையில், அது குறித்த
-
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 8 பேர் கைது
22 Feb 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
-
ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
22 Feb 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.