எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 18-வது சீசனை முன்னிட்டு, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு 18 தொடர்ச்சியான ஐ.பி.எல். சீசன்களில் விளையாடியதற்காகவும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்களின் பங்களிப்பிற்காகவும் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு பகுதியை ரோகித் சர்மாவின் பெயர் சூட்டப்படுகிறது.
இது குறித்து ரோகித் கூறியதாவது:- இப்படி ஒன்று நடக்கும் என்று நான் என் கனவில் கூட நினைத்தது கிடையாது. தற்போது என்னுடைய பெயர் இங்கு சூட்டப்படுவது நம்ப முடியவில்லை. என் பெயர் உள்ள ஸ்டேண்ட் முன் நான் விளையாட போகிறேன் என்று நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. வான்கடே மைதானம் புதிதாக புனரமைக்கப்பட்ட பின் இங்குதான் நாம் உலக கோப்பையை வென்றோம். தற்போது இந்த மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
______________________________________________________________________________________________
100-வது போட்டியில் ராகுல் தெவாதியா
குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாதியா தனது 100ஆவது ஐ.பி.எல். போட்டியில் டில்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடினார். ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் தெவாதியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2014ஆம் ஆண்டு அறிமுகமானார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2022 முதல் விளையாடி வருகிறார். ஆல்-ரவுண்டரான ராகுல் தெவாதியா 99 ஐ.பி.எல். போட்டிகளில் 1,043 ரன்கள், 32 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள், கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் என அடித்து போட்டியை வென்று கொடுத்துள்ளார். சிறந்த பினிஷராக அறியப்பட்டு வரும் ராகுல் தெவாதியா சமீபகாலங்களில் சுமாராகவே விளையாடி வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறது. ராகுல் தெவாதியாவின் 100ஆவது போட்டிக்காக ஐ.பி.எல். சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
______________________________________________________________________________________________
கம்மின்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்சின் மனைவி ரெபேக்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெபேக்கா விமான நிலையத்தில் தனது லக்கெஜ் பெட்டிகளுடன் கம்மின்சும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் 'குட்பை இந்தியா, இந்த அழகான நாட்டைப் பார்வையிடுவதை நாங்கள் மிகவும் விரும்பினோம்' என்று பதிவிட்டுள்ளார். இதனால் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் விலகிவிட்டாரா? என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
______________________________________________________________________________________________
இங்கிலாந்து கால்பந்து வீரர் மரணம்
இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் ஜோ தாம்சன், அங்குள்ள ரோச்டாலே, கார்லிஸ்லே யுனைடெட், சவுத் போர்ட், பரி உள்ளிட்ட கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார். 36 வயதான் தாம்சன் நடுகள வீரராக 225 ஆட்டங்களில் 23 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டியில் ஆடியதில்லை.
இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாம்சனின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரது விருப்பப்படியே அவரது இல்லத்தில் குடும்பத்தினர் சுற்றி இருக்க உயிர் பிரிந்தது.
______________________________________________________________________________________________
டெல்லியை பின்னுக்கு தள்ளிய ஆர்.சி.பி
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆர்.சி.பி. அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் ஹோம் மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை ஆர்.சி.பி படைத்துள்ளது. இதற்கு முன்னர் இந்தப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெல்லி அணி (45 தோல்வி, டெல்லி மைதானம்) இருந்தது.
______________________________________________________________________________________________
ஐ.பி.எல். தொடரில் டேவிட் சாதனை
ஐ.பி.எல். தொடரின் போட்டி ஒன்றில் முதலில் விளையாடிய ஆர்.சி.பி. 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் விளாசினார். இதனால் ஆர்.சி.பி. அணி 14 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது தோல்வியடைந்த ஆர்.சி.பி. அணி வீரர் டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் தோல்வியடைந்த அணியின் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார். மேலும் முதல் இன்னிங்சில் மிகக் குறைந்த ரன்கள் குவித்த அணியில் அரை சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் டிம் டேவிட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
பயிற்சியின் போது கார் விபத்தில் மீண்டும் சிக்கிய நடிகர் அஜித்
19 Apr 2025பிரசல்ஸ் : பெல்ஜியம் ஸ்பா சர்கியூட்டில் நடைபெற்ற ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது.
-
அதிவேக 1000 ரன்கள்: படிதார் புதிய சாதனை
19 Apr 2025பெங்களூரு : ஐ.பி.எல்.
-
தேர்தல் அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை: துரை வைகோ அதிரடி பேட்டி
19 Apr 2025சென்னை : தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், அதில் விருப்பம் இல்லை என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் சதமடித்த வெயில்
19 Apr 2025சென்னை : தமிழ்நாட்டின் 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
-
தோல்வியிலும் ஆட்ட நாயகன்: வாழ்த்து மழையில் டிம் டேவிட்
19 Apr 2025பெங்களூரு : தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற டிம் டேவிட்டுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
டிம் டேவிட் 50...
-
விடுமுறையைக் கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
19 Apr 2025கொடைக்கானல் : தொடர் விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
-
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து நீக்கப்படுமா..? - பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணம்
19 Apr 2025புதுடெல்லி : பிரதமரின் சவுதி அரேபியா பயணத்தில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளா
-
மைதானத்திற்கு தனது பெயர்: ரோகித்
19 Apr 2025ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 18-வது சீசனை முன்னிட்டு, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் எம்.எஸ்.
-
புதிய பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆவதை விரும்பவில்லை: ஸ்ரேயாஸ்
19 Apr 2025பெங்களூரு : புதிய பேட்ஸ்மேன் வந்து உடனடியாக செட்டிலாகி விளையாடுவதை நான் விரும்பவில்லை என்று பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
-
தமிழகத்தில் தொழில் முனைவோர், தொழில்களை ஊக்குவிக்க ஐந்து முக்கிய அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Apr 2025சென்னை : சென்னை குன்றத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்க அறிவுசார் சொத்துரிமையான ‘புவிசார் குறியீடு’ பெறுவதற்காக வ
-
தமிழகத்தில் இன்று வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம்
19 Apr 2025சென்னை : தமிழகத்தில் இன்று வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஜோஸ் பட்லர் அதிரடி: டெல்லியை வீழ்த்தியது குஜராத்
19 Apr 2025அகமதாபாத் : ஜோஸ் பட்லரின் அதிரடி காரணமாக டில்லியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
-
நிலவுக்கு அருகே வரும் இரு கோள்கள்: வானில் நிகழவுள்ள ஸ்மைலி எமோஜி
19 Apr 2025சென்னை : நிலவுக்கு அருகே இரண்டு கோள்கள் வந்து நமது கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன.
-
பாபர் அசாம் அற்புதமான ஆட்டத்துடன் திரும்பி வருவார்: கராச்சி அணி உரிமையாளர்
19 Apr 2025கராச்சி : பாபர் அசாம் ஒரு அற்புதமான ஆட்டத்துடன் திரும்பி வருவார் என்று கராச்சி கிங்ஸ் அணி உரிமையாளர் சல்மான் இக்பால் கூறினார்.
-
சஞ்சு சாம்சனுடன் மோதலா..? - ராகுல் டிராவிட் விளக்கம்
19 Apr 2025ஜெய்ப்பூர் : சாம்சனுக்கும், தனக்கும் இடையில் எந்த வித பிரச்சனையும் இல்லை என்றும், இருவரும் ஒத்த கருத்துடன் பணியாற்றி வருகிறோம் எனவும் டிராவிட் கூறியுள்ளார்.
-
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் கலைஞர் கைவினை திட்டத்தை துவக்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் : மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பது ஏன் என்பது குறித்தும் விளக்கம்
19 Apr 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலைஞர
-
கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 3 பேர் பலி: குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
20 Apr 2025திருச்சி, திருச்சியில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 3 பேர் பலியானதாக வெளியான தகவலை அடுத்து குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்: ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு
20 Apr 2025கீவ், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 387 குண்டு வீச்சுத் தாக்குதல்களையும்
-
மக்கள் குறைகளை தீர்க்காத அரசு: திருச்சி சம்பவத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
20 Apr 2025சென்னை, திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, ‘மக்களின் குறைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத தி.மு.க.
-
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
20 Apr 2025ராம்பன், ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள தரம் குந்த் பகுதியில் மேக வெடிப்பால் நேற்று முன்தினம் இரவு முதல் பொழிந்த மழையால் திடீர் வெள
-
சீனாவில் 10ஜி இணைய சேவை அறிமுகம்
20 Apr 2025பெய்ஜிங், ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10-ஜி ஸ்டாண்ட
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
20 Apr 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2832 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
காஸாவில் போரிடுவதை தவிர வேறுவழியில்லை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தகவல்
20 Apr 2025டெல்அவிவ், காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த இரு நாள்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
திருமணமானதை மறைத்து மோசடி: நடிகர் காதல் சுகுமார் மீது வழக்கு பதிவு
20 Apr 2025சென்னை, திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணத்தை மோசடி செய்ததாக துணை நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகர் காதல் சுகுமார் மீது மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர
-
திருநங்கைகள் குறித்து இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக போராட்டம்
20 Apr 2025லண்டன், இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட், சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்