எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக டெல்லியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. குறிப்பாக, சுற்றுலா தலமான பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு மத்திய உள்துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
வரும் ஜூலை 3-ம் தேதி புனித அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட உள்ளது. அப்போது பஹல்காம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்ல பாதுகாப்புப் படை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. உள்ளூர் நிர்வாகம் தன்னிச்சையாக பைசரன் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கி உள்ளது.
பாதுகாப்புப் படைகளிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் அந்த பகுதியில் வீரர்களை பணியில் அமர்த்தி இருப்போம். தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து தகவல் அறிந்த 20 நிமிடங்களுக்குள் அங்கு பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து சென்றனர். எனினும் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை ஒப்புக் கொள்கிறோம். காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள், அரசு ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது வழக்கம். முதல்முறையாக சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதை எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு மத்திய உள்துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 weeks ago |
-
தவறுதலாக பாக். எல்லைக்குள் நுழைந்த எல்லை பாதுகாப்புப்படை வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு
26 Apr 2025டெல்லி : எல்லை பாதுகாப்புப்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.
-
இந்தியாவை விட்டு வெளியேற கெடு: வாகாவில் குவியும் பாகிஸ்தானியர்கள்
26 Apr 2025அட்டாரி : ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏரா
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடித்து அழிப்பு
26 Apr 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடத்தை கண்டுபிடித்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்: காஷ்மீர் பிரச்சினை குறித்து அமெரிக்க அதிபர் கருத்து
26 Apr 2025வாஷிங்டன் : காஷ்மீர் பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
26 Apr 2025சென்னை : தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்த வண்ணம் இருந்த நிலையில் நேற்று தங்கம் மாற்றமின்றி விற்பனையானது.
-
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்பு
26 Apr 2025வாடிகன் : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
-
கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
26 Apr 2025சென்னை, கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2025
26 Apr 2025 -
பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாக். பிரதமர் ஷெபாஸ் அறிவிப்பு
26 Apr 2025புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷொபஸ் ஷெரீஃப
-
'ரெங்கா.. கோவிந்தா.. கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
26 Apr 2025திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "ரெங்கா..
-
கால் இடறி கீழே விழுந்த துரைமுருகன்; விரைந்து வந்து நலம் விசாரித்த முதல்வர்
26 Apr 2025சென்னை, தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.26) கால் இடறி அமைச்சர் துரைமுருகன் கீழே விழுந்தார்.
-
கழுத்தை அறுத்து விடுவேன் : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து சைகை செய்த பாக். தூதர்
26 Apr 2025ஜம்மு : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து கழுத்தை அறுத்துவிடுவேன் என பாகிஸ்தான் தூதர் சைகை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி
26 Apr 2025ஹைதராபாத், பாகிஸ்தானை வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வேண்டு
-
தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனை தடைக்கு நடவடிக்கை: அமைச்சர் உறுதி
26 Apr 2025சென்னை, தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
தேசப்பணிக்கு தயார்.. இந்திய கடற்படை அறிவிப்பால் பரபரப்பு
26 Apr 2025புதுடெல்லி, பாகிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்
-
கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றபோது விபரீதம்: 2 தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி மாணவிகள் கடலில் மூழ்கி பலி
26 Apr 2025பெங்களூரு : தமிழக மருததுவக்கல்லூரி மாணவிகள் 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சேலம் பட்டாசு வெடி விபத்து; எடப்பாடி பழனிசாமி இரங்கல்
26 Apr 2025சேலம் : சேலம் பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ள நிலையில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவ
-
பஹல்காம் பாதுகாப்பு குறித்து கேள்வி: எதிர்க்கட்சிகள் மத்திய அரசு விளக்கம்
26 Apr 2025புதுடெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: முன்பதிவுகளை ரத்து செய்த 12 லட்சம் சுற்றுலா பயணிகள்
26 Apr 2025புதுடெல்லி, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை ரத்து
-
உத்தரகண்டில் ராணுவ சீருடை விற்பனைக்கு தற்காலிக தடை
26 Apr 2025பஹல் : உத்தரகண்டில் பாதுகாப்பு காரணங்களினால் அங்குள்ள சந்தைகளில் இந்திய ராணுவத்தினரின் சீருடைகள் விற்கத் தற்காலிகமாக அம்மாநில காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
-
மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி முர்மு நேரில் அஞ்சலி
26 Apr 2025வாடிகன், வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
கோவை வந்த விஜய்க்கு த.வெ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
26 Apr 2025கோவை, த.வெ.க. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க கோவை வந்துள்ள விஜய்-க்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
எல்லையில் பாக். மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி
26 Apr 2025ஸ்ரீநகர் : எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டனர். அவர்களை இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
-
ஏலத்தில் தவறு செய்து விட்டோம்: சி.எஸ்.கே அணி பயற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஒப்புதல்
26 Apr 2025சென்னை : சி.எஸ்.கே.
-
செந்தில் பாலாஜி ராஜினாமா? அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்தததால் பரபரப்பு
26 Apr 2025சென்னை, செந்தில் பாலாஜிக்கு மாற்றாக மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்ததால் அவர் ராஜினாமா செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது,