முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலம்பியாவில் கார் குண்டு வெடித்து 8 ராணுவ வீரர்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பொகோடா, டிச. 9 - கொலம்பியா நாட்டில் கார் குண்டு வெ டித்ததில் ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். இது பற்றிய விபரம் வருமாறு _ 

கொலம்பியாவில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகல் குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு உள்ளிட்ட தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். 

தலைநகர் பொகோடாவின் அருகே இன்சா நகரம் மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் காரில்  வெடி பொருட்களை நிரப்பி வந்து வெடிக்க செய்தனர். 

இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள், போலீசார் உள்பட 8 பேர் பலியானார்கள். 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். 

குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற் கவில்லை. கொலம்பியா புரட்சி ஆயுத படையை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொம்பியா அதிபர் ஜூவான் இமானுவேல் சந்தோஷ் இந்தத்  தாக்குதல் கோழைத் தனமானது என்று டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்