முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

37 கைதிகளை கொன்ற போலீஸ்காரருக்கு 10 ஆண்டு ஜெயில்

புதன்கிழமை, 19 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ, மார்ச்.20 - கண்ணீர் புகையால் மூச்சு திணற  வைத்து 37 கைதிகளை கொன்ற போலீஸ்காரருக்கு  எகிப்து கோர்ட்டு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது.

எகிப்தில் அதிபராக இருந்த முகமது முர்சி கடந்த ஜீலை மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில், 1000-க்கும் மேற்றபட்டோர் பலியாகினர். கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கெய்ரோ சிறையில் இருந்து அபுஷாபால் ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர். வேனில் கொண்டு செல்லப்பட்டபோது போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அது மோதலாக  மாறியது. அப்போது, கைதிகளுடன் சென்ற போலீஸ்காரர் ஒருவர் வேனுக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார். எனவே, அதிலிருந்து வெளியான புகையால் மூச்சுத் திணறலில் 37 கைதிகள் வேனுக்குள்ளேயே பலியாகினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இச்சம்பவம் கொலையாக கருதப்பட்டு போலீஸ் அதிகாரிகள் 4 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் கைதிகள், மீது கண்ணீர் புகை குண்டு வீசிய போலீஸ்கார் ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

ஏற்கனவே ஒரு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டிருந்த மற்ற 3 போலீஸ் அதிகாரிகள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்