முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் பகுதிகளில் வீடுகளில் திருடியவர் கைது

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், ஜூன்.4 - திருப்பரங்குன்றம் பகுதிகளில் பட்டப்பகலில் வீடுபுகுந்து கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்க ரூபாய் 15ஆயிரம், 11 செல்போன்கள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் சுந்தர்(25). இவர் கேரளாவை சேர்ந்த சந்திரிகாவை திருமணம் செய்து கொண்டு திருப்பரங்குன்றம் அருகேயுள்ள கூத்தியார்குண்டில் குடும்பம் நடத்திவந்தார். சுந்தர் வாடகைக்கு சரக்கு வேன் ஓட்டிவந்தார். இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து பீரோவில் இருக்கும் தங்கநகைகள் மற்றும் ரொக்கத்தை சுந்தர் கொள்ளையடித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கொள்ளயனை தேடிவந்தனர். நேற்று முன்தினம் உச்சப்பட்டியில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த சுந்தரை விசாரித்தனர். விசாரணையில் சந்தேகமடைந்த போலீசார் ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று முறைப்படி விசாரித்தனர். விசாரணையில் கூத்தியார்குண்டு மாயழகு என்பவர் வீடு, அரசு பஸ் கண்டக்டர் ரமேஷ் கண்ணன் வீடு திருநகர் அரவிந்தன்நகர் பகுதியில் வசிக்கும் போலீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் உமாபதியின் வீடு ஆகியவற்றில் கிட்டத்தட்ட 30 பவுன் தங்க நகைகளும் ரொக்கமாக சுமார் ஒரு லட்சம் வரையில் கொள்ளையடித்ததாக போலீசாரிடம் சுந்தர் ஒப்புக்கொண்டான். அவரிடம் இருந்து 30 பவுன் தங்க நகைகள் 11 செல்போன்கள், லேப்டாப் ஒன்று ரொக்கம் ரூ. 15 ஆயிரம் ஆகியவற்றை தனிப்படை போலீசார் கைப்பற்றினார்கள். செல்போன்களும், லேப்டாப்பும் எங்கு திருடப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்குள் தொடர்ந்து வீடுகளில் கைவரிசை காட்டிவந்த சுந்தரை திருப்பரங்குன்றம் போலீசார் அதிரடியாக கைப்பற்றினர். மேலும் உச்சப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி முருகேஸ்வரியை கொலை செய்த அவரது காதலன் கல்லூரி மாணவன் சத்தியராஜையும் கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் குறித்து அப்பகுதி மக்கள் திருப்தி அடைந்ததுடன், மனந்திறந்து தங்களது  பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்