முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டாய மதமாற்ற விவகாரம்: பார்லி.யில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளி

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - கட்டாய மதமாற்ற விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மேல்சபையில் தொடர்ந்து 3-வது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் நேற்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
கட்டாய மதமாற்ற விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை, மாநிலங்களவை கூடியவுடன் இவ்விகாரத்தை சமாஜ்வாதி எம்.பி. நரேஷ் அகர்வால் எழுப்பினார். அவர் பேசியதாவது, அமைச்சர்கள் அறிக்கைகள் வெளியிடும்போது லட்சுமண ரேகையை தாண்டக்கூடாது என பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கொள்கை நிலைப்பாடாக நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிகிறது. அமைச்சர்கள் செய்யும் தவறுக்கு பிரதமரே பொறுப்பாவார். அமைச்சர்கள் சர்ச்சைக் கருத்தை வெளியிடும்போது பிரதமரே அதற்கு விளக்கமளிக்க வேண்டும், என்றார்.
சமாஜ்வாதி எம்.பி.யின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, அவ்வாறு எந்த ஒரு முடிவும் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து