முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் நலம் குறித்து அவதூறு செய்தி: இணையதளம் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கு மனுவில், ‘ரீடீப்.காம்’ என்ற இணைய தளத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது. இந்த செய்தியினால் முதல்–அமைச்சருக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, ரீடீப்.காம் இணையத்தளத்தின் செய்தியாளர் ராமசுப்பிரமணியன், தலைமை செயல் அதிகாரி அஜித்பாலபகிரிஷ், தலைமை செய்தி ஆசிரியர் நிகில் கக்ஷ்மன், மூத்த இணை செய்தி ஆசிரியர் அபிஷேக் மண்டே ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.இந்த மனு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து