முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகரீகமற்ற பேச்சு: இளங்கோவனுக்கு சரத்குமார் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 

காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரம் தாழ்ந்து பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.பிரதமரிடம், முதல்– அமைச்சர் தமிழகத்தின் முக்கியமான பிரச்சனைகளை தீர்த்து வைத்திட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்த தருணத்தை நாகூசாமல் நாரச நடையில் பேசியது மிக மிக கேவலமான ஒன்றாகும்.

தன் குடும்ப பாரம்பரியத்தை மறந்து அல்லது தன்னிலை மறந்து அவர் பேசிய பேச்சுக்கள் அவர் அரசியல் வாழ்க்கையில் கலங்கம் நிறைந்த கருப்பு நாளாகும். அவர் செயல்களுக்கு தமிழக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்