முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் சிறப்பு முகாம் சக்சேனா தகவல்

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ள வரும் 11ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று செய்தியாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாமை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்ததாகவும், அந்த கோரிக்கையை ஏற்று வரும் 11ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களின் மூலம் 14 லட்சத்து 45 ஆயிரத்து 895 விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும், வரும் 9ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் வாக்காளர் பட்டியல் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி வெளியிடப்படும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்