எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ஆக.23 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (22.8.2011) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் 45 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகம் ஆகியவற்றிற்கான கட்டடங்களைக் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காவல் துறையில் பல்வேறு புதிய கட்டமைப்புகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் ஏற்படுத்தி இந்தியாவிலேயே தமிழக காவல் துறையை முதன்மையான காவல் துறையாக மாற்றுவதற்கு பல்வேறு முனைப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். சென்னை மாவட்டம் செயின்ட் தாமஸ் மவுண்ட், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டம் வெங்கல், திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டை, அரியலூர் மாவட்டம் இரும்புலிகுறிச்சி, பெரம்பலூர் மாவட்டம் பாடலூர், மதுரை மாவட்டம் திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி, கல்லல், புழுதிப்பட்டி மற்றும் வந்தி, திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் மற்றும் தாடிக்கொம்பு, விருதுநகர் மாவட்டம் மாரனேரி, திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை, ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அம்மாபேட்டை, திருப்ர் மாவட்டம் தளி, இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, தங்கச்சிமடம், பரமக்குடி ஆகிய இடங்களில் 6 கோடியே 59 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 காவல்நிலைய புதிய கட்டடங்களையும், காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர், கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை, தேனி மாவட்டம் உத்தமபாளையம், கோவை மாவட்டம் ஆர்.எஸ். புரம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 மகளிர் காவல்நிலையங்களையும் தமிழக முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும் திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை குடியிருப்பு பகுதியில் 104 குடியிருப்புகள், சேலம் மாநகர் சூரமங்கலத்தில் 16 குடியிருப்புகள், திருவண்ணாமலை மாவட்டம் பெரனமல்லூரில் 23 குடியிருப்புகள், பெரம்பலூர் மாவட்டத்தில் 11 குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 20 குடியிருப்புகள், திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் 8 குடியிருப்புகள், நன்னிலத்தில் 26 குடியிருப்புகள் மற்றும் முத்துப்பேட்டையில் 3 குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் 1 குடியிருப்பு, கடையநல்லூரில் 3 குடியிருப்புகள், கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் 6 குடியிருப்புகள், நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூரில் 12 குடியிருப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆயுதப்படை குடியிருப்பில் 72 குடியிருப்புகள், ஓசூரில் 96 குடியிருப்புகள், திருப்ர் மாவட்டம் குமாரலிங்கத்தில் 7 குடியிருப்புகள், மதுரை மாவட்டம் கீழவளவில் 7 குடியிருப்புகள், கோட்டம்பட்டியில் 19 குடியிருப்புகள், காஞ்சிபுரம் மாவட்டம் பாலூரில் 23 குடியிருப்புகள், அச்சரப்பாக்கத்தில் 23 குடியிருப்புகள் என 480 புதிய காவலர் குடியிருப்புகளும், கடலூர் மாவட்டம், கேப்பர்மலைப் பகுதியில் 67 சிறைக் காவலர் குடியிருப்புகளும் புதிதாக கட்டப்பட்டுள்ளன.தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தால் 31 கோடியே 85 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேற்கண்ட 547 புதிய குடியிருப்புகளை தமிழக முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். மதுரை மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலக புதிய கட்டடம், திருச்சி மாவட்டத்தில் தனிப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவுகளுக்கான புதிய அலுவலகக் கட்டடம், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலக புதிய கட்டடம், தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டின மருதூர் சோதனைச் சாவடிக்கான புதிய கட்டடம், ஈரோடு மாவட்டத்தில் ஆயுதப்படை அலுவலக புதிய கட்டடம், கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆர்.எஸ். புரம், துணை காவல் ஆணையர் அலுவலக கட்டடம் ஆகிய 6 கட்டடங்கள் 5 கோடியே 17 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் 26 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகம் ஆகியவற்றிற்கான கட்டடங்களை திறந்து வைத்த நிகழ்ச்சியில், காவல்துறையினர் மற்றும் சிறைத்துறையினருக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் குடியேறவுள்ள குடும்பத்தினர் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகம், காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், காவல் துறையின் பிற பிரிவு அலுவலகங்கள் மற்றும் சிறைத்துறையினருக்கான குடியிருப்புக் கட்டடங்களை திறந்து வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட காவல் அலுவலகக் கட்டடம், 21 புதிய காவல் நிலையக் கட்டடங்கள், துறையின் பிற அலுவலகக் கட்டடங்கள், 8 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள், 480 காவலர் குடியிருப்புகள், சிறைத்துறையினருக்கான 67 குடியிருப்புகளை திறந்து வைத்ததில் உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் சிறந்த சட்டம் ஒழுங்கு நிலைமையை பராமரிப்பது எனது தலைமையில் அமைந்துள்ள அரசின் தலையாய கடமையாகும். அதன் ஒரு அங்கமாக இன்று புதியதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்களும், பிற கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையில் பணியாற்றுபவர்கள் மக்களுக்கு உற்ற நண்பராகவும், ஆலோசகராகவும் மற்றும் மனிதநேயம் மிக்கவராகவும் பணியாற்ற வேண்டும் என்று காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் பொதுவாக காவல்நிலையத்திற்கு செல்லவே அச்சப்படுவார்கள்.
தமிழகத்து மகளிர் எந்தவிதமான அச்ச உணர்வுமின்றி, தயக்கமுமின்றி, காவல்நிலையங்களுக்கு சென்று தங்களுக்குள்ள குறைகளை அங்கே எடுத்துக்கூறி அவற்றிற்கு நிவாரணம் தேடவேண்டும், பரிகாரம் தேடவேண்டும் என்பதற்காகவே முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை 1992 ஆம் ஆண்டு நான் தொடங்கிவைத்தேன். அதன் பின்னர் தமிழகமெங்கும் பல அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் துவக்கப்பட்டு நல்ல முறையில் செயலாற்றி வருகின்றன. இன்றைய தினம் 8 புதிய அனைத்து மகளிர் காவல்நிலையங்களின் கட்டடங்களை திறந்து வைத்ததில் நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காவலர்களுக்கான குடியிருப்புகள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட இயலும். இதனை கருத்தில் கொண்டு தற்பொழுது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 480 புதிய காவலர் குடியிருப்புகளை இன்று திறந்து வைத்ததில் நான் உள்ளபடியே உவகை கொள்கிறேன். காவல்துறையினருக்கு எனது தலைமையிலான அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. காவல்துறையினர் பொதுமக்களுக்கு உற்ற நண்பாக இருந்து தங்கள் பணிகளை செவ்வனே ஆற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். சிறைதுறையினரின் குடியிருப்புக்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கைதிகளை பாதுகாக்கும் பணியில் தங்களை முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்திக் கொள்ள முடியும். இதனை கருத்தில் கொண்டு தற்பெழுது கட்டப்பட்டுள்ள சிறைத்துறையினருக்கான 67 புதிய குடியிருப்புகளை இன்று திறந்து வைத்ததில் நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் சிறைத்துறையினர் தங்கள் பணிகளை சிறந்த முறையில் ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வின்போது, செய்தி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், சிறைத் துறை தலைவர், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர், மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.