முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பட அதிபர் பஞ்சு அருணாசலம் உடல் நலக்குறைவால் மரணம்

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2016      சினிமா
Image Unavailable

சென்னை - பிரபல பட அதிபர் பஞ்சு அருணாசலம் உடல் நலக்குறைவால் சென்னை யில் இன்று மரணம் அடைந் தார். அவருக்கு வயது 75. இவர் மறைந்த கண்ணதாசனி டம் உதவியாளராக பணி புரிந்தார். பின்னர் கதாசிரிய ராக, பாடல் ஆசிரியராக புகழ்பெற்றார்.
அன்னக்கிளி, ப்ரியா, உல்லாச பறவைகள், கழுகு உள்பட 15 படங்களை தயாரித்தார். அன்னக்கிளி படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். 8 படங் களை டைரக்டு செய்துள்ளார்.

இவர் முதன் முதலில் கலங்கரை விளக்கம் படத்தில் ‘‘பொன்னெழில் பூத்தது’’ என்ற பாடலை இயற்றினார்.சாரதா படத்தில் வரும்  மணமகளே மருமகளே வா... வா... என்ற பாடல் அவருக்கு பெரும் புகழை தேடி தந்தது.  இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். அன்னக்கிளி, உல்லாசப்பறவைகள் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். ரஜினி, கமலைக் கொண்டு அதிகப் படங்களைத் தயாரித்துள்ளார். பஞ்சு அருணாசலத்தின் மறைவுக்குத் திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்