முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிறுதி சுற்றில் தோல்வி: மக்காவ் ஓபன் போட்டியிலிருந்து சாய்னா வெளியேற்றம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

மக்காவ்  - இந்தியா வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதியில் தோல்வி அடைந்ததன் மூலம் மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து வெளியேறினார்.

சாய்னா தோல்வி
சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியான மக்காவ் பிராந்தியத்தில், மக்காவ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஜங் இமானை இன்று எதிர்கொண்டார்.ஜங் இமானை எதிர்த்து விளையாடிய சாய்னா சற்றும் எதிர்பாராத வகையில் 21-12, 21-17 என்ற நேர் செட்களில் அவரிடம் தோல்வியைத் தழுவினார். இதனால், சாய்னா நேவால் மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து வெளியேறினார்.

தரவரிசையில் 10-வது இடம்
இதற்கிடையே, சர்வதேச பேட்மிண்டன் சம்மேளம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில், சாய்னா நேவால் 10-வது இடத்தில் உள்ளார். காலில் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பின் இயல்பாக விளையாட முடியாமல் சாய்னா தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்