முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் படத்திறப்பு விழா

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வாரின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு படத்திறப்பு விழா மற்றும் மரக்கன்று வழங்கும் விழா காஞ்சிபுரத்தில் பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் சார்பில் நேற்று நடந்தது. நிகழ்சசியில் இயற்கை பண்ணை விவசாயி பேரின்பன் தலைமை தாங்கினார். பாலாறு பாதுகாப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் வரவேற்றார். நம்மாழ்வாரின் படத்தை, இயற்கை விவசாயி எழிலன் நேற்று காலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காஞ்சி மாவட்ட மரம் வளர்போர் சங்கத் தலைவர் பா.ச.மாசிலாமணி கலந்து கொண்டு 1000 நாட்டு மரக்கன்றுகளை வழங்கினார். இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களையும், நம்மாழ்வார் பற்றிய தகவல்களையும் விவசாயிகள் பலரும் பொதுமக்களுக்கு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் இறையழகன், தனசேகரன், கோபி, வேதகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்