எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி : மனிதர்களைப் போன்று ''பொய்முகம்'' காட்டும் குணம் பகவானிடம் இல்லை என்று ஆழ்வார்திருநகரியில் நடைபெற்ற திருப்பாவை உபன்யாசத்தின்போது வேளுக்குடி கிருஷ்ணர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருகரியில் நவதிருப்பதிகளில் கடைசி ஸ்தலமான ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் ஆதிநாதர் ஆழ்வாராக ஆதிநாயகி, குருகூர் நாயகியுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் மார்கழி அத்யனத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி இந்தாண்டிற்கான மார்கழி அத்யனத் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிறப்பாக பராங்குசன் சாரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் நாள்தோறும் கோவிலில் ஆன்மிக சிறப்புபெற்ற உபன்யாசர் வேளுக்குடி கிருஷ்ணின் திருப்பாவை உபன்யாசம் நடைபெற்று வருகிறது. 16ம் திருப்பாவை உபன்யாசத்தின்போது வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது,
பக்தி யோகத்தால் மட்டுமே இறைவனை நாம் அடைய முடியும். கடவுள் மீது பக்தி செலுத்துவது வாழ்வில் இனிமையானதாகும்.மனிதர்களாகிய நமக்குத்தான் எத்தனை எத்தனையோ முகங்கள் இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொருவிதமான முகம் என்று அர்த்தமில்லை. ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஒவ்வொரு சூழலிலும் அந்த சூழ்நிலைக்கேற்ப எத்தனை எத்தனையோ விதமான முகங்களை கொண்டே செயல்படுகிறோம் என்பது இயல்பானது தான்.
பொதுவாக வீட்டில் ஒரு முகத்துடனும், அலுவலகத்தில் ஒரு முகத்துடனும் இருக்கிறோம். வீடு, அலுவலகம் இரண்டினையும் தவிர்த்து வெளிவுலகினை பார்க்கும்போது பொதுஇடத்தில் வேறொரு முகத்துடன் இருப்பதும் உண்டு. இப்படி நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் எத்தனை எத்தனையோ முகங்களை வைத்துக்கொண்டு திரிகிறோம்.
வீடு, அலுவலகம், பொதுஇடம், நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பொய்முகத்தினை கொண்டு வாழ்கிறோம். இப்படிப் பொய்முகங்களை கொண்டு வாழ்கிற மனிதர்கள் இவ்வுலகில் நிறையவே உண்டு. இதேநேரத்தில் சிலர் மனிதர்களைப்போன்று தானே பகவானும் பல்வேறு முகங்களை கொண்டு இருப்பார் என்றுகூட சிலர் கேட்கலாம். இந்தகேள்வி இயல்பானது தான்.
அதற்காக இதனை பொய் என்று சொல்லிவிட முடியாது. நாம் தினமும் வணங்கும் பகவானுக்கும் பலமுகங்கள் இருப்பது உண்மையானது தான். பெருமாளுக்கு திருமுகங்கள் பல உண்டு. ஒருமுகத்தை நமக்கு காட்டி அருளும்போது, மற்ற எல்லாமுகங்களையும் பெருமாள் மறைத்துக்கொள்கிறார்.
பெருமாள் இவ்வுலக பயன்பாட்டுக்காகவும், நம்மைப்போன்ற அடியவர்களுக்கு அருள்வதற்காகவும் பலமுகங்களுடன் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். பகவான் பெருமாள் விருப்பு&வெறுப்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவருக்கு நம்மைப்போன்று இன்ப, துன்பங்கள் எல்லாம் இல்லை. இங்கே குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ''மனிதர்களைப் போன்று பொய்முகம் காட்டுகிற குணம் எம்பெருமான் பகவானிடம் இல்லவே இல்லை''. ஏனென்றால் இவ்வுலகினையே உய்வித்ததோடு மட்டுமல்லாமல் நம்மையெல்லாம் காக்கும் நாயகனே அவர்தான்.
இதுபோன்று தான் 'தேவை' என்பது நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் வேறுபட்டு இருக்கிறது. உங்களுக்கு தேவையானது என்று நீங்கள் நினைப்பது எனக்கு தேவையில்லாததாக இருக்கலாம். இதுபோன்று நான் எனக்கு தேவையில்லை என்று நினைப்பது உங்களுக்கு மிகமிக அவசியமானதாகவும், முக்கியத்தேவையானதாகவும் இருக்கலாம். எது எப்படியாயினும், உலகின் அனைத்துமனிதர்களும் தம் அன்றாடவாழ்வில், தேவை என்று ஒவ்வொரு விஷயத்தை நினைக்கின்றனர். அந்த விஷயம் குறித்து குழம்புகின்றனர். அதற்குத்தீர்வு எங்கே கிடைக்கும் என்றும் தேடி அலைகின்றனர். அப்படி ஒரு விஷயத்தைத் தேடினால்,
அதற்கு உண்டான அர்த்தத்தை அறியவேண்டும் என்று விரும்பினால், அவை அனைத்தும் எங்கே கிடைக்கும் தெரியுமா? மகாபாரதத்தில் நிச்சயமாக கிடைக்கும்.
நமக்கான மிகப்பெரிய வித்தும், சத்தும் அதில்தான் நிரம்பி இருக்கிறது. ''மகாபாரதம்'' நம் தேசத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரியசொத்து. இறைவன் தானே விரும்பி நமக்குத் தந்திருக்கிற அருட்கொடை தான் மகாபாரதம். மகாபாரதத்தில் ஒரு விஷயம் இல்லையெனில், அதனை வேறுஎங்கே தேடினாலும் கிடைக்காது என்பதை நீங்கள் முதலில் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட அற்புதமான மகாபாரதத்தைத் தந்தருளியதால், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நாயகன் என்று போற்றிக் கொண்டாடுகிறோம்.
ராமாயணம், சீதையின் வைபவத்தை அழகுற நமக்கு தந்தருளியது என்றால், மகாபாரதம் ஸ்ரீகிருஷ்ண வைபவத்தை முழுவதுமாகப் பறைசாற்றுகிறது. ஸ்ரீராமரைப் போல் நாமும் வாழவேண்டும் என்பதே ராமாயணத்தின் சாராம்சம். ஸ்ரீராமரை முன்மாதிரியாக, ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதே ஸ்ரீராம சரிதையின் நோக்கம். அப்படியெனில், ஸ்ரீகிருஷ்ணரைப்போல் வாழவேண்டும் என்பதைச் சொல்கிறதா? மகாபாரதம் என்று எவரேனும் குதர்க்கமாக யோசிக்கலாம்.
ஸ்ரீகண்ணன் வெண்ணையைத் திருடினான், மண்ணைத் தின்றான், ஏகத்துக்கும் பொய்கள் சொன்னான், பதினாறாயிரம் ஸ்திரீகளைக் கொண்டிருந்தான். அதற்காக, ஸ்ரீகிருஷ்ணரை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் அப்படியிருக்கலாமே என்று நினைப்பது மிகப்பெரும் தவறு. அப்படி நினைத்தால் நமது சிந்தனையில் மிகப்பெரும் பிழை இருப்பதாகத்தான் அர்த்தம்.
ஒட்டுமொத்த வாழ்வியல் தத்துவங்களைச் சொல்கிற உபதேசம் அடங்கிய மகாபாரதத்தில், அர்ஜுனனுக்கு சொல்வதுபோல அகில உலகமக்களுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய உபதேசங்களை மனத்துள் இறக்கி, அதன்படி வாழவேண்டும் என்பதே மகாபாரதத்தின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு மனிதனும் அந்த உபதேசங்களைச் செயல்படுத்தி, செம்மையாக வாழவேண்டும் எனநினைத்தாலே, நம்தேசம் இன்னும் வளமாகிவிடும்.
அப்பேர்ப்பட்ட வாழ்க்கைத் தத்துவங்களை நமக்கு தந்துள்ள கீதையை அருளிய ஸ்ரீகண்ண பரமாத்மா தான் உலகுக்கெல்லாம் நாயகனாக இருக்கிறார். அதனால்தான் அவனுக்கு ‘நாயகன்’ என்று திருநாமம் அமைந்தது. பரந்துபட்ட உலகை வழிநடத்துபவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அவரே நாயகர் எனும்போது நாயகி? பிராட்டி ஸ்ரீருக்மிணிதேவி ஆவார்.
ஒருவீட்டுக்கு நாயகனாகவும் நாயகியாகவும் இருப்பது பெற்றோர். எனவே, அவர்களின் செயல்பாடுகளை அறிந்து, அவர்கள் சொல்கிற விஷயங்களின்படி வாழ்வில் நடப்பதே முக்கியம். குழந்தைகளின் முதல் ரோல்மாடலாக இருக்கிற பெற்றோர் சரியாக நடந்தால்தான், பொய்யும் புரட்டுமின்றி வாழ்ந்தால்தான், குழந்தைகளும் அவற்றைப் பார்த்தும், பின்பற்றியும் அதன்படியே நடக்கும். அதனால்தான் தந்தையை ''குடும்பத்தலைவன்'' என்றும், தாயை ''குடும்பத்தலைவி'' என்றும் சொல்கிறோம். இதேநேரத்தில் நமக்கெல்லாம் தலைவனாக பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், நாயகியாக ஸ்ரீருக்மிணி பிராட்டியாரும் உள்ளனர்.
இந்திரியம் எனும் குதிரையை நம்மால் அடக்கமுடியாது. அதை அடக்கியாள்வதற்கு மனம் என்கிற கடிவாளம் தேவையாக இருக்கிறது. அந்த மனத்தில் இறைவனை நினைத்து அமர்த்திக்கொண்டு விட்டால், மனத்தை அப்படியே இறைவனிடம் ஒப்படைத்துவிட்டால், கடிவாளம் போட்டு இந்திரியங்களை அடக்கி, நம்மை நிம்மதியுடனும் அமைதியுடனும் இனிதே வாழச் செய்வான் நாயகன் ஸ்ரீகிருஷ்ணன்.
எனவே, மனதை கடவுளான பகவான் பக்கம் திருப்புங்கள். மொத்த மனதையும் அவனிடம் ஒப்படைத்துவிடுங்கள். அதற்குப் பெயர்தான் சரணாகதி. கடவுளிடம் சரணடைதல் என்பது இவ்வாழ்வில் உயர்வான விஷயத்துடன், உத்தமமான காரியமாகும். அப்படி இறைவனிடம் தம்மை ஒப்புக்கொடுக்கிறவர்களே, சரணடைபவர்களே வாழ்வில் பாக்கியவான்கள். இதற்கேற்ப நாமும் வாழ்வில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் பக்தியால் சரண் அடைந்து வாழ்வில் ஆனந்தம் கண்டு பேரானந்தம் பெற்று என்றும் எப்போதும் மகிழ்வோடு வாழ்ந்திடுவோம் என்றார்.
இந்த உபன்யாச நிகழ்வில், எம்பெருமானார் ஜீயர் சுவாமி, ஆத்தான் மேலத்திருமாளிகை அப்பு சடகோபாச்சாரியார், கீழத்திருமாளிகை ராமானுஜ சுவாமி, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருப்பாவை உபன்யாசம் தினந்தோறும் காலை 7.30மணி முதல் காலை 9.30மணி வரை என தொடர்ந்து வரும் ஜனவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பராங்குசன் சேரிட்டபுள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.