எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம்
வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழாவில் 2481 பயனாளிகளுக்கு ரூ.12.80 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவி தொகையினை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
------------------
கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தில் சமூக நலத்துறையின் மூலம் பத்தாம் வகுப்பு, பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த ஏழைப்பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவித் தொகை வழங்கும் விழாவில் தமிழக சட்டபேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி.வ.ஜெயராமன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் . தலைமையில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2481 பயனாளிகளுக்கு ரூ.12.80கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கத்துடன் நிதியுதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நலத்திட்டங்கள் வழங்கி பேசுகையில்,
அம்மா வருமை கோட்டிற்கு கீழ் வாழும், ஏழை எளிய பெண்களின் திருமணம் தங்குதடையின்றி நடைபெற வேண்டும் அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு நாளும், சிந்தித்து எண்ணற்ற திட்டத்தை வழங்க உத்தரவிட்டு அதன்படி, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும், திருமண நிதியுதவித்திட்டம் மற்ற மாநிலங்களே புகழ்ந்திடும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் 5வகையான திருமண நிதியுதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சமூக நலத்துறையின் மூலம் முவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவுத்திருமண நிதியுதவித்திட்டம், பழங்குடியினர் பயன்பெறும் வகையில் மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவு சிறப்பு நிதியுதவித்திட்டம், ஏழை விதவைத்தாய்மார்களின் குடும்பம் பயன்பெறும் வகையில் ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித்திட்டம், விதவை பெண்கள் மறுமணம் செய்திடுவதை ஊக்குவிக்கும் வகையில் டாக்டர் தர்மாம்பாள் திருமண நிதியுதவித்திட்டம் மற்றும் மக்களிடையே வகுப்பு வேறுபாடுகளை களையும்பொருட்டு டாக்டர் முத்துலட்சுமிரெட்டி அம்மையார் நினைவு கலப்புத்திருமண நிதியுதவித்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
அதில், மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவுத்திருமண நிதியுதவித்திட்டம் ஏழைக்குடும்பங்களுக்கு மிக உன்னத திட்டமாக திகழ்நது வருகின்றது. இதில், 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ.25,000மும் திருமாங்கல்யத்திற்கு 4கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50,000மும் திருமாங்கல்யத்திற்கு 4கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருவதுடன். தற்பொழுது அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க 8கிராம் தங்கமும் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஒரு ஆரோக்கியமான போட்டி, இருந்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எல்லோரும் பட்டப்படிப்பு படித்து முழுமையான பயனைப் பெறவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ஒரு காலத்தில் பெண்கள் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பெற்றோர்கள் இருந்த காலகட்டத்தை மாற்றி ஒவ்வொரு பெண்ணும் ஒரு சாதனையாளராக வேண்டும் என்ற நோக்குடன் அம்மா பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் என்றால் அம்மா எப்பொழுதுமே தனிக்கவணம் எடுத்துக்கொள்வார்கள்.
பெண்களின் பணிச்சுமையை குறைக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கியதுடன் அனைத்துப் பேருந்துநிலையங்களிலும் தாய்ப்பால் ஊட்டும் அறை கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவித்திட்டம். பேறு கால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9மாதமாக உயர்த்தி வழங்கியது. தன்னம்பிக்கையுடன் வாழ விலையில்லா ஆடு, கறவை மாடு வழங்கும்திட்டம். பிறந்த குழந்தைகளுக்கான அம்மா பரிசுப்பெட்டகம் என எண்ணற்ற திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தாலே போதும், பட்டப்படிப்பு முடியும் வரை கட்டணமின்றி பயின்று வர அனைத்து திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு உறுதுணையாக இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைத்து பொருளாதாரத்தில் நிலைநிறுத்திக் கொள்வதுடன் அரசு வழங்கிடும் திட்டங்களை முழுமையாக பெற்று பயன்பெற்றுக்கொள்ள வேண்டும்
இன்று பத்தாம் வகுப்பு படித்த 878 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவியுடன் 4கிராம் தாலிக்கு தங்கம் ரூ.3.11கோடி மதிப்பீட்டிலும் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு படித்த ஏழை பெண்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியுடன் 4கிராம் தங்கம் ரூ.9.69கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 2481 பயனாளிகளுக்கு ரூ.12.80கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது என நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நாகராஜன், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஒ.கே.சின்னராஜ், அம்மன்.கே.அர்சுனன், ஆர்.கனகராஜ். எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் அலுவலர் தா.கிருஸ்துராஜ், சமூக நல அலுவலர் ஐ.பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.