எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் - விருதுநகர் மாவட்டம், சூலக்கரை ஆயுதப்படையினர் குடியிருப்பு வளாக மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம். வருகை தந்தபோது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.ராசராசன்,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் வரவேற்றனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்;. தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், 58 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காவல் பதக்கங்களை அணிவித்தும் பாராட்டுச் சான்றிதழை வழங்கியும், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வருடாந்திர பராமரிப்பு மானியத்தினையும், இராமசாமியாபுரம், துலுக்கபட்டி மற்றும் அயன்நத்தம்பட்டி ஆகிய ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவியினையும், 3 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவிகளையும், வேளாண்மைத்துறையின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 75 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், 3 நபர்களுக்கு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஊட்டி டீ அதிகளவில் விற்பனை செய்தமைக்காக தலா ரூ.3 ஆயிரம் மதிப்பில் ரூ.9 ஆயிரம் ஊக்கத்தொகையினையும், பாராட்டுச்சான்றிதழ்களையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய 3 நபர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பில் ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையினையும், பாராட்டுச்சான்றிதழ்களையும், மாநில அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற 3 நபர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 66 அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 25 காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆக மொத்தம் 113 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்து 17 ஆயிரத்து 075 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
பின்னர், சிவகாசி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் கேந்திரியா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, சாட்சியாபுரம் வாய்பேசாதோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளி, இராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேவர்ஸ்காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பெரியவள்ளிகுளம் நோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளில் முதலிடம் பிடித்த இராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இரண்டாம் இடம் பிடித்த பெரியவள்ளிகுளம் நோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் இடம் பிடித்த விருதுநகர் கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பரிசுகளையும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நினைவு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் .சிவஞானம் வழங்கினார். குடியரசுதின விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன்;,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சி.முத்துக்குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆ.பூமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெயஅருள்பதி, காவல் துணை கண்காணிப்பாளர்கள், அரசுதுறை உயர் அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.