முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற முழுமூச்சுடன் பாடுபடுவோம்- வைகோ

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.- 7 - அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற முழு மூச்சுடன் பாடுபடுவோம் என்று மதுரையில் வைகோ கூறினார். மதுரை கே.புதூரில் ம.தி.மு.க. பிரமுகர் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக வைகோ நேற்று மதுரை வந்தார். அவர் அந்த விழாவில் பேசியதாவது; தமிழக அரசியலில் பரபரப்பும், திடுக்கிடும் திருப்பங்களும் நடந்து வருவதாக பத்திரிகையில் செய்தி வருகிறது. நாங்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்.  அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி வருகிற தேர்தலில் வெற்றி பெற நாங்கள் முழு மூச்சுடன் பாடுபடுவோம். ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு பக்கபலமாக முதல்வர் கருணாநிதி இருந்துள்ளார்.

 எனவே வருகிற தேர்தலில் கருணாநிதிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர்  நிருபர்களுக்கு கேள்விகளுக்கு வைகோ பதில் அளித்தார்.

கேள்வி ; தி.மு.க. காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே? 

பதில்; தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கவில்லை என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது இதுகுறித்து திட்டவட்டமாக முடிவு ஏதும் ஏற்படாதநிலையில் நான் கருத்து கூறவிரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்