எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், உலக காசநோய் நிகழ்ச்சி, நாகர்கோவில், ரோட்டரி கம்ய+னிட்டி ஹாலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் , தலைமையேற்று, பேசும்போது தெரிவித்ததாவது:-ஒவ்வொரு வருடமும் மார்ச் 24-ஆம் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு காசநோய் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், நமது மாவட்டத்தில், உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, இவ்வருடம் விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம், சைக்கிள் பேரணி, ராட்சத பலூன்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே காசநோய் குறித்து, விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. காசநோயினால், இந்தியாவில் ஆண்டிற்கு 28 இலட்சம் நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உலக காசநோய் ஆய்வறிக்கை 2016-ன்படி, சுமார்; 4.5 இலட்சம் நபர்கள் இந்த நோயினால் மரணம் அடைகிறார்கள். இதில் 1,30,000 நபர்கள் பன்முக எதிர்ப்பு காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். கடந்த 2016-ஆம் ஆண்டில், நமது மாவட்டத்தில் 1,362 நபர்கள் காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 21 சதவிகிதம் நபர்கள் சர்க்கரை நோயினாலும், 1.6 சதவிகிதம் நபர்கள் எச்ஐவி தொற்றால் நோயினாலும், 22 நபர்கள் பன்முக எதிர்ப்பு காசநோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகள் பெற்று வருகிறார்கள். மேலும், நமது மாவட்டத்தில், பன்முக எதிர்ப்பு காசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளை கண்டறிய சிபிநாட் என்ற நவீன கருவி பயன்படுத்தப்பபடுகிறது. இந்த கருவி மூலம் பரிசோதனை செய்ய ரூ. 2,500- செலவாகும். ஆனால், பொதுமக்களுக்காக இச்சேவையை, முற்றிலும் இலவசமாக தனியார் மருத்துவமனைகளுக்கும் அளித்து வருகிறோம். அதைபோல ஒளிரும் நுண்ணோக்கிகள் மூலம் பரிசோதனைகளை பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் காசநோய் கிருமியை மிக துல்லியமாக கண்டறியும் ஒரு கருவியாகும். எனவே, காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றி, தொடர்சிகிச்சை மேற்கொண்டால், நோய் முற்றிலுமாகி விடும். மேலும், மருத்துவர் அறிவுரை இல்லாமல் காசநோய் மாத்திரைகளை நிறுத்தக்கூடாது என்றும், இடைநிறுத்தம் செய்தால் பன்முக எதிர்ப்பு காசநோய் உருவாகிட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.முன்னதாக, உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றிபெற்ற 17 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், 15 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும், காசநோய் பணியில் சிறப்பாக பணியாற்றிய 13 மருத்துவப்பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களும், நினைவுப்பரிசுகளும் வழங்கினார். மேலும், காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரை வழங்கிய 40 தன்னார்வலர்களுக்கு தலா ரூ. 1,000- ஊக்கத்தொகையினையும் வழங்கினார்.நிகழ்ச்சியில் இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு. எ.வஸந்தி, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ஜி.ரவீந்திரன், துணை இயக்குநர், மருத்துவப்பணிகள் (காசநோய்) மரு. வி.பி.துரை, துணை இயக்குநர், மருத்துவப்பணிகள் (தொழுநோய்) மரு. எஸ்.கிரிஜா, திட்ட மேலாளர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு மரு. என்.டி.ஸ்டெல்லா ஜேனட், மருத்துவ அலுவலர்கள் மரு. எ.அஹமது கபீர், டி.முத்துக்குமார் (மாவட்ட காசநோய் மையம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.