எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டியில் 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 30 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ஆணை ஆகியவற்றை தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் வழங்கினார்.
மதிப்பீட்டுக்குழு ஆய்வுக்கூட்டம்
தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழுவின் ஆய்வுக்கூட்டம் ஊட்டியிலுள்ள தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் தலைமை தாங்கி 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் 30 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை வழங்கி பேசியதாவது-
சிறப்பு பகுதி திட்டத்திற்கு ரூ.75 கோடி
மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் அரசு ஏழை_எளிய மற்றும் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை_எளிய மக்களுக்கு அத்தகைய திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய எங்களைப் போன்ற குழுக்களை எல்லா பகுதிகளுக்கும் அமைத்துள்ளது. சமூக பொருளாதார மேம்பாட்டினை மாநிலம் முழுவதும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நம்முடைய தமிழக அரசு சமச்சீர் வளர்ச்சி நிதியம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 422 திட்டங்களைக்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.282.22.கோடியாகும். ஊரக பகுதியில் இருக்கும் 105 வட்டாரங்களை தேர்வு செய்து அங்கு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேபோல மலைப்பகுதி வளர்ச்சிக்கான சிறப்பு பகுதி மேம்பாட்டித்திட்டத்தை உருவாக்கி அதற்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நேற்றைய ஆய்வின் போது வனப்பகுதியில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும், தார்சாலைகளாக மாற்ற வேண்டும் என மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்கினர். அதன்படி அத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக
அரசு கொண்டு வரும் திட்டத்தை விரைவாகவும், வேகமாகவும் நிறைவேற்ற வேண்டும் என்பது மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் எண்ணமாகும். தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை விரைவுபடுத்தி நிறைவேற்ற வேண்டும் என்பது இங்கு வருகை தந்திருக்கும் மதிப்பீட்டுக் குழுவின் நோக்கமும், கடமையுமாகும். அரசுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு பாலமாக இருந்து அரசு கொண்டு வரும் திட்டங்களை மதிப்பீடு செய்து அந்த திட்டங்களையெல்லாம் விரைவாகவும், வேகமாகவும் மக்களிடையே கொண்டு சென்று பணியை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் மதிப்பீட்டுக்குழுவின் நோக்கம். எனவே அரசின் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
இந்த ஆய்வுக்கூட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா(தாம்பரம் சட்டமன்ற தொகுதி) ஆர்.கனகராஜ்(சூலூர்), ஆர்.சக்கரபாணி(ஒட்டன்சத்திரம்), எஸ்.சுதர்சனம்(மாதவரம்), செல்வமோகன்தாஸ் பாண்டியன்(தென்காசி), நந்தகுமார்(அணைக்கட்டு), டாக்டர் பரமசிவம்(வேடசந்தூர்), பாஸ்கர்(நாமக்கல்), மணோன்மணி(வீரபாண்டி), ராஜேஷ்குமார்(கிள்ளியூர்), ஜெயந்தி பத்மநாபன்(குடியாத்தம்), மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வளர்ச்சிப்பணிகள் ஆய்வு
அதனைத்தொடர்ந்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுவானது ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோழிப்பண்ணை பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.143 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட கோழிப்பண்ணை கோட்டேஸ் சாலையினையும், நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட அனுமாபுரம் பகுதியில் தலா ரூ.2.10 லட்சம் வீதம் கட்டப்பட்டு வரும் 7 பசுமை வீடுகளையும், நடுவட்டம் பகுதியில் பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் கட்டும் பணியினையும் மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.