முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொட்டியத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      திருச்சி
Image Unavailable

தொட்டியத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 27-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது நிகழ்விற்கு தொட்டியம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யாசாமி தலைமை வகித்தார்.

 நிர்வாகிகள்

வெற்றிலை விவசாயிகள் சங்கத்தலைவர் N.தியாகராஜன் பிள்ளை, முன்னாள் நகர தலைவர் சதாசிவம், நகர துணைத்தலைவர் பெரியண்ணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் கணேசன், யாக்கப்ராஜ், வர்த்தக பிரிவு நகரத்தலைவர் கார்த்திக், விவசாய அணி வட்டாரத்தலைவர் ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் கார்த்திகேயன், வட்டார செயற்குழு உறுப்பினர் பிச்சை, ஜெயபிரகாஷ், துரைபாண்டி, சண்முகம், அலகரை கண்ணன் உட்பட நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் காங்கிரஸ் நகர செயலாளர் சக்தி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்