முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு துறை “பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      அரியலூர்

அரியலூர் வட்டத்தில் விழுப்பணங்குறிச்சி கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் பாப்பாக்குடி (வடக்கு) கிராமத்திலும், செந்துறை வட்டத்தில் பொன்பரப்பி கிராமத்திலும் நடைபெறவுள்ளது.

கூட்டம்

அரியலூர் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், உடையார்பாளையம் வட்டத்திற்கு அரியலூர் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளரும், செந்துறை வட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரும், மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட கூட்டத்தினை வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில் கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் (பொ) சே.தனசேகரன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து