எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள ஆயிரத்து 1700 பணியிடங்கள் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும் என்றும் சட்டபேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
30 சதவீத மானியம்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி எரிசக்தித்துறை மானியக்கோரிக்கையின் போது வெளியிட்ட புதிய அறிவிப்புகளில், விவசாய பயன்பாட்டிற்கான சூரியமின் சக்தி நீர் பம்பு மாதிரி திட்டம் மாநிலம் முழுவதும் 5, 7.5 மற்றும் 10 குதிரைத்திறன் கொண்ட மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத 1000 எண்ணிக்கை சூரிய மின்சக்தி நீர் பம்புகள், தமிழக அரசின் 40 சதவீத மானியம், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையின் 20 சதவீத மானியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 30 சதவீத மானியம் மற்றும் விவசாயிகளின் பங்காக 10 சதவீதம் என்ற அடிப்படையில் இலவச விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்து, பதிவு மூப்பு பட்டியலில் இருந்து தங்களது விண்ணப்பதை நீக்கிக் கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் வேளாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து வழங்கப்படும்.
இலவச மின் இணைப்பு
விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலிலுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் விரைவு மின்னிணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம் 5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், 7.5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரமும், 10 குதிரைத்திறன் உள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சம் வீதம் ஒரு முறை கட்டணம் செலுத்தும் 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு 6 மாத காலத்திற்குள் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.
பணி நியமனம்
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையினால் மாநிலத்திலேயே முதல்வகையான 500 மெகாவாட் திறன் கொண்ட சூரியபூங்கா ஒன்று தனியார் நிறுவனம் மூலம் நிறுவ உதவி செய்யப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2017 -18 ம் ஆண்டில் 300 உதவி பொறியாளர் மின்னியல், 25 உதவிப்பொறியாளர் சிவில், 300 தொழில் நுட்ப உதவியாளர் மின்னியல், 400 கள உதவியாளர், 250 இளநிலை உதவியாளர் (கணக்கு) மற்றும் 300 கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை பதவிகளுக்கான தகுதியான நபர்கள் வெளிப்படையான முறையில் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
மின்பகிர்மான கோட்டங்கள்
திருவள்ளுர் மற்றும் பல்லடத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மின்பகிர்மான வட்டங்கள் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். திருமழிசை, திட்டக்குடி மற்றும் ஆலங்குடியை தலைமையிடமாக கொண்டு ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் புதிய மின்பகிர்மான கோட்டங்கள் உருவாக்கப்படும். அந்தியூர் வட்டம் பர்கூரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் பகிர்மான பிரிவு அலுவலகம் உருவாக்கப்படும். கிண்டியில் ரூ.10 மதிப்பீட்டில் அலுவலர் குடியிருப்பு அமைக்கப்படும். கொரட்டூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படும்.
செல்போன் வழியாக ...
செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தற்பொழுது இயக்கத்தில் உள்ள 1912 தொலைபேசி வாயிலாக மின்தடை பழுது நீக்கும் சேவை ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டணம் இல்லா தொலைபேசி வசதியாக மாற்றப்படும். தமிழகத்தில் குறு,சிறு தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு 112 கிலோவோட் மின் தேவை வரையிலான புதிய மின்மாற்றி நிறுவ தேவைப்படாத புதிய தொழிற்சாலை மின் இணைப்புகளுக்கு 15 தினங்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.
ரூ.52 கோடி மதிப்பீட்டில் ....
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகில் வெளிப்பரப்பு உறைவி புதுப்பித்தல், அலகு 5 ல் தற்பொழுது உள்ள காலாவதியான கட்டுப்பாட்டு அமைப்புக்கு பதிலாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவுதல், அலகு 4 தற்பொழுது உள்ள மறு சூடாக்கி அமைப்பை முழுவதுமாக நீக்கி புது மறு சூடாக்கி அமைத்தல் மற்றும் நிலக்கரி கையாளும் பணியை மேம்படுத்த 2 ஆயிரம் மெட்ரிக்டன கொள்ளவுடைய ஒரு இணைப்பு நிலக்கிரி கொணரும் அமைப்பு நிறுவுதல் ஆகிய பணிகள் ரூ.52 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
அம்மா பசுமை கிராமம்
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை வருடாந்திர அடிப்படையில் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து மின்சக்தியை பூர்த்தி செய்யும் விதமாக கிராமத்திலேயே கிடைக்கும் நிலையான பசுமை எரிசக்தி ஆதாரங்களை கொண்டு அம்மா பசுமை கிராமம் ஒன்று நிறுவப்படும். தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையினால் அதன் உள் மற்றும் வெளி பங்குதாரர்களை இலக்காக கொண்ட நிலையான ஆற்றல் அமைப்புகளின் சமூக பொருளாதார, நிதி ,நிர்வாக , தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு பகுதிகளுடன் தொடப்புடைய பாடங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சி திட்டமான நிலையான எரிசக்தி பயிற்சி முன் முயற்சியை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.