எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், நவ.14- எங்களால் தான் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது என்று இருமாப்பு காட்டிய எதிர்க்கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் முடிவின் மூலம் மக்கள் அதற்கு சரியான பதிலளித்துள்ளனர் என்று திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான சி.சீனிவாசன் விளக்கம் அளித்து பேசினார். திண்டுக்கல் வி.கே.எஸ். மகாலில் தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் இரா.விசுவநாதன் தலைமை தாங்கி கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் சாணக்கியத்துடன் செயல்பட்டு தனியாக போட்டியிட முடிவெடுத்தார். உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று பரீட்சித்து பார்க்க வேண்டும். கடந்த 5 மாத அ.தி.மு.க. நல்லாட்சிக்கு மக்கள் என்ன பரிசு வழங்கப் போகிறார்கள்? என்பதற்காகவே கூட்டணி வேண்டாமென முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்தார். நமது கட்சியில் உள்ள தலைவர்கள் கூட்டணியை எதிர்பார்த்தார்கள். ஆனால் தனித்துப் போட்டியிட வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீர்க்கமான முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் பலனாக 10 மாநகராட்சி மேயர் பதவிகள், ஏராளமான இடங்களில் நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகள், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர் பதவிகளை அ.தி.மு.க. கைப்பற்றி மகத்தான வெற்றியைப் பெற்றது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. எங்களால் தான் மகத்தான வெற்றியைப் பெற முடிந்தது என பல்வேறு எதிர்க்கட்சிகள் இருமாப்பு செய்து வந்தனர். அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் முடிவின் மூலம் சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க.விற்கு 37 சதவீத மக்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். தேர்தலின் போது முதல்வர் ஜெயலலிதா எடுத்த மிகச்சரியான முடிவே இதற்கு காரணமாக அமைந்தது. இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். அக்கட்சியின் தலைவர்களும் கட்சியைக் கலைத்து விட்டு முதல்வர் ஜெயலிலதாவை நோக்கி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இனி யாராலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்பதை உள்ளாட்சி தேர்தல் நிரூபித்துள்ளது. புதிதாக இணைபவர்களுக்கு அ.தி.மு.க.வில் உரிய மரியாதையும் கட்சி பொறுப்பும் வழங்கப்படும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி துணை மேயர் கோபாலகிருஷ்ணன், வேடசந்தூர் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிச்சாமி, நகர்மன்றத் தலைவர் வி.மருதராஜ், நகரச் செயலாளர் ராமுத்தேவர், நத்தம் தொகுதி செயலாளர் கண்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் பி.ஜி.எம்.துளசிராம், பேரவை செயலாளர் பாரதிமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் நாகரத்தினம், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பழக்கடை நாகராஜன், சுப்பிரமணி, அப்துல் ரஹீம், இக்பால், சேவியர், ராமலிங்கம், வி.டி.ராஜன், சோனா சுருளி, சக்திவேல் மற்றும் அகரம் பேரூராட்சி துணைத்தலைவர் சக்திவேல், கவுன்சிலர் அமாவாசை, தாடிக்கொம்பு பேரூர் கழக செயலாளர் முத்துராஜ், பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்ட மாவட்ட, நகர ஒன்றியக் கிளைக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட