முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூம்பூர் ஊராட்சியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமிபூஜை பரமசிவம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

வியாழக்கிழமை, 31 ஆகஸ்ட் 2017      திண்டுக்கல்
Image Unavailable

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றியம் கூம்பூர் ஊராட்சியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமிபூஜையை பரமசிவம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளர் மலர்வண்ணன் தலைமை வகித்தார்.
 கூம்பூர் ஊராட்சியில் தாய் திட்டத்தின் மூலம் ரூ.18.7 லட்சம் மதிபீட்டில் குடி நீர் மேல்நிலை தொட்டிகள் எஸ்.புதூர் பிரேம் நகர் பேவர் பிளாக் சாலை அமைக்கவும் சின்னகுளம் தூர்வாருதல் வடுகம்பாடி ஊராட்சி பாறைப்பட்டியில் குடிநீர் மேல்நிலை தொட்டி மேற்கு வடுகம்பாடி பாலம் கட்டுதல் இரா.புதுக்கோட்டை ஊராட்சியில் கருங்குளம், செங்குளத்துப்பட்டி, பேவர் பிளாக் சாலை, பள்ளப்பட்டி, பில்லமநாயக்கன்பட்டி, மாயனமேடை அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.
 இந்நிகழ்ச்சியில் வடுகம்பாடி முன்னாள் தலைவர் சிவக்குமார் அதிமுக நிர்வாகி, கே.பி.குமார் ஒப்பந்தகாரர்கள், நடராஜன், பெருமாள்சாமி மற்றும் ஜெயராமன் முன்னால் தலைவர் கூம்பூர் துளசிமணி பழனிவேல், ஊராட்சி கழக செலாளர் செல்வராஜ், குமரேசன், அப்பாவு, மணிமாறன், ஊராட்சி செயலாளர் வடிவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து