எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி: - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டுமையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ் வளர்ச்சிக் குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் 21-ஆம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா நேற்று பல்கலைக்கழக லெ.சித.லெ. பழநியப்பச் செட்டியார் நினைவரங்கத்தில் நடைபெற்றது.
அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இக்கருத்தரங்தைத் துவக்கி வைத்து தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில், தமிழ் பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியின் தொடக்கமே இப்பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நோக்கமாகும் .மொழி இனத்தின் அடையாளம். ஓர் இனத்தின் பண்பாட்டையும் விழுமியங்களையும் தெரிந்து கொள்வதற்கு மொழி அவசியம். அத்தகைய மொழியை பாதுகாக்க வேண்டும் என்னும் நோக்கில் தான் அழகப்பாபல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டு மையமும் தமிழ் பண்பாட்டு காட்சியகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். மோழியை பணம் சம்பாதிக்கும் கருவியாக கருதக்கூடாது. தாய்மொழி ஒரு கருவியல்ல. ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மாணவர்கள் ஆரம்ப கல்வி கற்கத் தொடங்கும் போது, அவர்களுக்கு நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், விழுமியங்களையும் கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். எனவே, பள்ளி ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து இக்கருத்தரங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றார்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் திரு. அன்பரசு இராஜேந்திரன், தமது சிறப்புரையில், அழகப்பாபல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் அழகப்பர் அருங்காட்சியகமும், பண்பாட்டு காட்சியகமும் மிகச் சிறந்தமரபுடைமை நிலையம் எனப் பாராட்டினார். மேலும், நாம் நமது வேர்களை மறந்து விடக்கூடாது. உலகமயமாதல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது போல நமது வாழ்க்கையும் சுருங்கிவிட்டது. நாம் நமது அடையாளத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நமதுகலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பகிர்ந்துக் கொள்ள நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மொழியை வாழும் மொழியாககற்பிக்கவேண்டும். நம் மொழியை இலகுவாகவும்,பயன்படுத்தும்;விதமாகவும் கொண்டு செல்ல வேண்டும். தமிழ் மொழியை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் செயலை நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்றார்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சர் உமறுப்புலவர் தமிழ்மொழிநிலைய பாடத்துறைத் தலைவர் முனைவர் இரா. விமலன் தமது வாழ்த்துரையில், நம் முன்னோர்கள் நமது பண்பாட்டைகாரண காரியத்தோடு ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆதனை உணர்ந்து அவற்றை பின்பற்ற வேண்டும். கணினிசார்ந்த பயணத்தை நாம் மேற்கொண்டால் தான் நாம் நம் மொழியை வளர்க்க முடியும். தொழில்நுட்பத்தோடு நாம் நம் மொழியை கைகோர்த்து கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
மேனாள் சாகித்திய அகாதமி உறுப்பினர் கவிஞர். தங்கம் மூர்த்தி, தமது வாழ்த்துரையில், தமிழ் மொழிபாரம்பரியம்மிக்க மொழி. ஆதை பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஒருவருக்கு தாயும், தமிழ் ஆசிரியரும் சிறப்பாக அமைந்து விட்டால், அதுவே அவருக்கு பெரிய வரமாகும். நமதுகலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பணியை அழகப்பாபல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டுமையம் சிறப்பாக செய்து வருகிறது எனபாராட்டினார். 21-ஆம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கம் நடத்துவது மிகவும் பொருத்தமானது. தமிழின் போக்கு சிறப்பாக அமைந்தால் தான் தமிழ் வளர்ச்சி பெறும் என்றார்.
சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மொழிநிலைய ஆசிரியர் முனைவர் கோ. சந்தன்ராஜ் மற்றும் தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் திரு. சு. நாகேந்திரன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.
கருத்தரங்க ஆய்வுக்கோவையை திரு. அன்பரசு இராஜேந்திரன் அவர்கள் வெளியிட துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) பேரா.வி. பாலச்சந்திரன், வரவேற்புரையாற்றினார். தமிழ்ப் பண்பாட்டுமைய இயக்குநர் பேரா. சே. செந்தமிழ்ப்பாவை நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.