முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா தொடரும் சம்பவம்: கலிபோர்னியாவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாப பலி

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். இதில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அரசு அனுமதி
அமெரிக்காவில் கடந்த வாரம் டெக்ஸாஸ் மாகாண நிகழ்விற்கு பிறகு மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. தொடர் கதையான தூப்பாக்கிச் சூடு சம்பவம், தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்துள்ளது. அங்கு மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். இதில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் பாதுகாப்பு கருதி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் அங்கு கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

5 பேர் பலி
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தெஹமா கவுண்டி பகுதியில் உள்ள பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அங்கிருந்தவர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தொடக்க பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் துப்பாக்கியால் சுட்ட நபரை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும், அங்கிருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு அப்புறப்படுத்தினர். துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து