முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறை வைக்கப்பட்ட 50 சிறுவர்கள் பாகிஸ்தானில் மீட்பு

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், டிச. 17 - கராச்சி நகரில் உள்ள மதரசாவின் ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 50 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கராச்சி நகரின் சொராப்காத் பகுதியில் உள்ள ஒரு மதரசாவின் ரகசிய அறையில் 50 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. தாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் சிறுவர்களுக்கு கடுமையான தண்டனையும் கொடுத்துள்ளனர். இது குறித்து ரகசிய தகவல் கிடைத்த போலீசார் அந்த மதரசாவுக்கு திடீரென்று சென்று சோதனை நடத்தினர். அப்போது ரகசிய அறையில் இருந்து 50 க்கும் மேற்பட்ட சிறுவர்களை போலீசார் மீட்டனர். 

ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்றும் மதரசாக்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மாலிக் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். வடமேற்கு கைபர் மாகாணத்தில் உள்ள பல மதரசாக்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெஷாவர் அருகே உள்ள மவுலானா மதராசாவில் தான் தலிபான் தலைவர் முல்லா உமர் பயிற்சி பெற்றதாக நம்பப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்