எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடந்த வாரம் நானும், ஜான்குமாரும் டெல்லி சென்று மத்திய நிதி மந்திரி, உள்துறை மந்திரி, மனிதவள மேம்பாட்டு மந்திரி, உள்துறை செயலர் ஆகியோரை சந்தித்தோம். அப்போது ஏற்கனவே வலியுறுத்தி வந்த முறையாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டோம்.நிதி மந்திரியும், நிதி செயலரை அழைத்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி கூறினார்.
மணல் தட்டுப்பாடு
திட்டமில்லா செலவுக்கு கிடைக்க வேண்டிய நிதி, தானே புயல் நிவாரணம், 6-வது சம்பளக் கமிழன் நிலுவை, 7-வது சம்பள கமிழன் ஆகிய நிதியை வழங்க கேட்டோம். தனி கணக்கு ஆரம்பிப்பதற்கு முன்பாக உள்துறை அமைச்சகம் கட்ட வேண்டிய கடனை மாநில அரசுகளிடம் அளிக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளோம். மத்திய மந்திரி எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து கோப்பை அனுப்பியுள்ளார். ஆனால் நிதித்துறை துரதிஷ்ட வசமாக காலதாமதம் செய்து வருகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு திட்டமிட்டு வழங்க வேண்டிய நிதியை காலதாமதம் செய்து வருகிறது. இது தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளை சந்தித்து பேசியும் பயனில்லை. ஆந்திர பிரதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றவில்லை என தெலுங்கு தேச எம்பிக்கள் பாராளுமன்றத்தை முடக்கினர். மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது.பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவு நிதி வழங்கப்படுகிறது. மாநிலத்தற்கு மாநிலம் பாரபட்சம் காட்டப்படுகிறது. யூனியன் பிரதேசமான டில்லியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு நிதியை மத்திய அரசு அளிக்கிறது. ஆனால் புதுச்சேரியில் மாநில அரசே ஒய்வூதியம் தரும் நிலை உள்ளது. 10 ஆண்டுக்கு முன்பு புதுவை அரசு பெற்ற கடனை படிப்படியாக திருப்பி செலுத்தி வருகிறோம். கடந்த மாதம் ரூ.177 கோடியும், இந்த மாதம் 100 கோடியும், அடுத்தமாதம் 177 கோடியும் கடனுக்காக கட்ட உள்ளோம். இதனால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நிதி அளிக்க மத்திய மந்திரி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்க வில்லை. மத்திய நிதி கமிஷனில் புதுவை, டெல்லியை இணைக்க வேண்டும் என நிதி கமிஷன் தலைவர் என்.கே.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளோம். அப்படி இணைத்தால் 42 சதவீத நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும். தற்போது 27 சதவீத நிதி மட்டும் தான் கிடைக்கிறது. ஆரோவில் 50-வது ஆண்டு பொன்விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 24-ந் தேதி புதுவை வருகிறார். பிரதமரின் வருகையின் போது துறைமுக திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்றும் கடிதம் மூலம் கேட்டுள்ளோம். தற்போது துறைமுகம் தூர்வாரப்பட்டு திங்கட்கிழமை வெள்ளோட்டம் விடப்படுகிறது. பிரதமரின் வருகையின் போது நானும், அமைச்சர்களும் அவரை நேரில் சந்தித்து புதுச்சேரியின் நிதி தொடர்பாக பேச உள்ளோம். பிரதமர் நேரிடையாக தலைவிட்டு புதுச்சேரிக்கு நிதி தர வேண்டும் என்று கோரிக்கையும் வைப்போம். மாநில அரசின் சார்பில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜிப்மர் நிறுவனம் சார்பில் ரூ.800 கோடியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக சேதராப்பட்டில் மாநில அரசு 50 ஏக்கர் நிலம் வழங்க உள்ளோம். புதுவையில் தொடர்ந்து மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழக அரசிடம் இருந்து பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளது. வெளிநாட்டில் இருந்து மணல் கொண்டு வர நில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தரமான மணலை இறக்குமதி செய்ய விதிமுறைகளை உருவாக்கும் படி கூறியுள்ளேnhம். அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். மலேசியா. தாய்லாந்து, கம்கோடியா ஆகிய நாடுகள் மணலை அளிக்க முன்வந்துள்ளது. நாடாளமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வருவது என்பது இயலாத காரியம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.