எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : குரங்கணி மலைக்காட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இரண்டு மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், தேனி வனக் கோட்டம், கொட்டக்குடிகாப்புக் காட்டில் (குரங்கணி பகுதியில்) ஏற்பட்ட தீ நிகழ்வு தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பிரச்னை எழுப்பினர் அதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம் வருமாறு:-
11-ம் தேதி அன்று மதியம் 2.30 மணி வனக்காவலர் முத்துப்பாண்டி மற்றும் மூன்று சூழலியல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் தீயினை அணைக்கும் பொருட்டு தீ நிகழ்வு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இவர்கள் இப்பகுதிக்கு மாலை 5 மணி அளவில் சென்றபோதுதான், மலையேற்றக் குழுவினர் தீயில் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. இதுமட்டுமல்லாமல், தீ விபத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கும், அவர்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், தீ விபத்து நிகழ்ந்த பகுதிக்கு உடனடியாக விரைந்து செல்லும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
அமைச்சர்கள் மேற்பார்வை
மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து, தமிழ்நாடு அரசு ஹெலிகாப்டர்களைக் கோரியது. அரசு மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் 11-ம் தேதி இரவு முழுவதும் மேற்கொண்டது. எனது உத்தரவின் பேரில், 12-ம் தேதி வருவாய்த்துறை அமைச்சர், ஆர்.பி.உதயகுமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுக் சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் குரங்கணிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
நேரில் சந்தித்து ஆறுதல்
நானும், மதுரைக்கு சென்று, தீக்காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்டநிர்வாகத்திற்கும், மருத்துவ துறையினருக்கும் நான் உத்தரவிட்டேன். மலை ஏற்றத்தில் ஈடுபட்ட 36 நபர்களில், 10 நபர்கள் காயமின்றி மீட்கப்பட்டனர். 17 நபர்களுக்கு பலத்த தீ காயங்கள் ஏற்பட்டது. மீதம் 9 நபர்கள் சம்பவ இடத்தியேயே இறந்து விட்டனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டேன்.
மேலும், காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பத்திற்கு, தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பலத்தகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசானகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்தும் வழங்க உத்தரவிட்டேன்.
தலா ரூ. 4 லட்சம்...
சிகிச்சையில் இருந்த மேலும் 7நபர்களும் இறந்துள்ளனர். இவர்களுக்கும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். விபத்து நடந்த பகுதியில், எண்ணெய் பதம் கொண்ட உயர்ந்து வளர்ந்த சுக்கு நாரி புற்கள் அதிகம் இருந்ததால், தீ மிகவும் விரைவாக பரவியுள்ளது. இக்குழுவினருக்கு தீ விபத்து ஏற்பட்டபோது, அவர்கள் மதிய உணவுக்கு பின்னர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.
2 மாதத்தில் அறிக்கை...
டாப் ஸ்டேஷன்-ல் இருந்து குரங்கணிக்கு மலை ஏற்றம் செல்வதற்கு நுழைவுச் சீட்டு பெற்றிருந்தும், 12 நபர்கள் அங்கீகரிக்கப்படாத வேறு பாதையில் கொழுக்கு மலைக்கு செல்வது தொடர்பான தகவல் ஜெயசிங், வனவருக்கு கிடைக்கப் பெற்றது என்பது வனத் துறையின் முதற்கட்ட விசாரணையின்போது தெரிய வந்தது. அந்த வனவரும் விசாரணையின் போது இதனை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். எனவே, அவர் 12-ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்காலங்களில் இதுபோன்ற நிகழ்வு ஏற்படுவதை தடுக்கும்வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரைகளை வழங்கவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைமுதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு மாத காலங்களில் அவர் தனதுஅறிக்கையினை சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட