முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் வென்ற வீராங்கனை மீது தாக்குதல்!

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்குதலில் தங்கம் வென்றவர், இந்திய வீராங்கனை பூனம் யாதவ். இவர் வாரணாசியில் உள்ள ரொஹானியா என்ற இடத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். உறவினருக்கும் அவர் பக்கத்து கிராமத்து தலைவருக்கும் சொத்துப் பிரச்னை இருக்கிறது.

இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு எழுந்தது. அந்தப் பிரச்னையில்  சமாதானப்படுத்த முயன்றார், பூனம். அப்போது திடீரென்று சிலர் அவர் மீது கற்களால் தாக்கத் தொடங்கினர். சரமாரியாக கற்கள் வீசப்பட்டதால், பூனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு கைகலப்பும் ஏற்பட்டது. இதில் பூனம் மீது தாக்குதல் நடந்தது. தையடுத்து காவலர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பூனமை மீட்டு பத்திரமாக அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து