எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் : இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவீன் வில்லியம்சன் சந்தித்து மறுத்து விட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
லண்டன், பக்கிம்காம்ஷைர் ஆகிய நகரங்களில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும் "பிரிட்டன்-இந்தியா வாரம்' என்ற பெயரில் இரு நாள் மாநாடும், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரிட்டனைச் சேர்ந்த அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில், பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா, நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கலந்து கொண்டார். விடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய நிதி மற்றும் ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் பங்கெடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக பிரிட்டனுக்கு அவர் பயணம் செல்லும் திட்டத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வகுத்திருந்தது. ஆனால், அந்த பயணத்தை நிர்மலா சீதாராமன் கைவிட்டு விட்டார்.
இந்நிலையில், பிரிட்டன் பயணத்தை நிர்மலா சீதாராமன் கைவிட்டு விட்டதன் பின்னணி குறித்த தகவல்களை அந்நாட்டில் இருந்து வெளிவரும் "தி சன்டே டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
லண்டன், பக்கிம்காம்ஷைர் நிகழ்ச்சியில் பங்கெடுக்க பிரிட்டனுக்கு வரும்போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் கவீன் வில்லியம்சனை ஜூன் 20 முதல் 22ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார். அப்போது இருதரப்பு பாதுகாப்பு விவகாரம், பாதுகாப்பு தளவாட கொள்முதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த அவர் முடிவு செய்திருந்தார்.
இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்கும்படி, வில்லியம்சனிடம் இந்திய அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு முன்பே கோரிக்கை விடுத்தனர். ஆனால், நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்கு வில்லியம்சன் மறுத்து விட்டார். வில்லியம்சனை சமாதானப்படுத்தி, நிர்மலா சீதாராமனை சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளில் பிரிட்டன் நிதியமைச்சர் உள்ளிட்ட 2 அமைச்சர்கள் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டது. இதைத் தொடர்ந்தே, பிரிட்டன் பயணத்தை நிர்மலா சீதாராமன் கைவிட்டு விட்டார்.
நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்த காரணத்துக்காக, வில்லியம்சனிடம் பிரிட்டன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலரும் கடிந்து கொண்டனர். அப்போது அவர்கள், உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்வதையும், ஆண்டுக்கு 50 பில்லியன் டாலர்களை ஆயுத கொள்முதலுக்கு மட்டும் இந்தியா செலவிடுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்ததை வில்லியம்சனின் மற்றொரு மோசமான முடிவு என்று பிரிட்டன் அமைச்சர்கள் பலரும் குற்றம்சாட்டினர் என்று "தி சன்டே டைம்ஸ்' பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் மறுப்பு:
இந்த செய்தி குறித்து, டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும்நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பதிவுகளில், "இது அடிப்படை முகாந்திரமில்லாத செய்தி. இரு நாடுகள் இடையே சிறப்பான நல்லுறவு உள்ளது. 2 பேரும் சந்தித்து பேசுவதற்கான ஏதுவான தேதி திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.