முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் : வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு

புதன்கிழமை, 18 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி : ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது, தள்ளுபடி செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.

வழக்கு ஒத்திவைப்பு

தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர். அதேசமயம், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

30-ம் தேதி விசாரணை

இந்நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவிற்கு தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது, தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து